விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து அண்ணாமலை அறிவிப்பு!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்.

திமுக சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பாக அன்னியூர் சிவாவை வேட்பாளராக அக்கட்சி தலைமை அறிவித்திருந்தது. இவர் திமுகவின் விவசாய அணி செயலாளராக உள்ளார். அதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா (முதுகலை ஓமியோபதி மருத்துவம்) போட்டியிடுவார் என அந்த கட்சி அறிவித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.