விஜயகாந்துக்கு உடல்நிலை குறித்து மா.சுப்பிரமணியன் தகவல்!

Filed under: அரசியல்,தமிழகம் |

அமைச்சர் மா சுப்பிரமணியன் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் மார்பு சளி மற்றும் இடைவிடாத இருமல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஐந்தாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், “விஜயகாந்த் உடல் உபாதைகள் காரணமாக அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது படிப்படியாக தேறி வருகிறது. இருப்பினும் அவருக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. தேவைப்படும்போது ஆக்சிஜன் கொடுக்கப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவ நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து வருகிறோம்” என்றார். விஜயகாந்த்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படவில்லை என தேமுதிக அறிக்கையில் கூறிய நிலையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.