விஜய் சேதுபதி படத்தின் ஷூட்டிங் நிறைவு!

Filed under: சினிமா |

சில ஆண்டுகளுக்கு முன் விஜய் சேதுபதி நடிப்பில் “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” என்ற திரைப்படத்தை இயக்கி தயாரித்தார் ஆறுமுக குமார். அத்திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதையடுத்து மீண்டும் அவர் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் விஜய் சேதுபதி. பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இந்த படம் தொடங்கப்படுவதில் தாமதமான நிலையில் கடந்த வாரம் மலேசியாவில் வைத்து இந்த படம் தொடங்கி ஷூட்டிங் நடந்தது.

இது சம்மந்தமான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி சமையல் கலை நிபுணராக நடிக்கிறார். மலேசியா வாழ் சமையல் கலைஞராக இந்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது சம்மந்தமாக மலேசியாவில் படக்குழுவினர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.