விஜய் படத்திற்கு கூடுதல் கட்டணம் குறித்து ஆணையர் அலுவலகத்தில் மனு!

Filed under: சினிமா |

வரும் செப்டம்பர் 5ம் தேதி விஜய் நடித்த ‘கோட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமூக ஆர்வலர் இப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

“கோட்” திரைப்படம் விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்க உள்ளது. ஏற்கனவே இந்த படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் ‘கோட்’ படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திரையரங்குகளில் அனுமதி இன்றி அதிக காட்சிகள் திரையிடுவதை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இம்மனு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.