விஜய் மக்கள் இயக்க நிர்வாகி விபச்சார தொழிலா!

Filed under: அரசியல்,சினிமா,தமிழகம் |

திருச்சி மாவட்டம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி செந்தில் ஸ்பா, மசாஜ் சென்டர் பெயரில் விபச்சார தொழில் செய்து வந்ததாக எழுந்த புகாரின்படி கைது செய்யப்பட்டுள்ளார்.

60க்கும் மேற்பட்ட ஸ்பாக்கள் திருச்சி மாவட்டத்தில் இயங்கி வருகின்றன. அதில், ஸ்பா, மசாஜ், ஸ்டிரீமிங் ஆகியவவை நடந்து வருகிறது, இதில், சிலவற்றில் பாலியல் தொழில் நடந்து வருவதாக புகார்கள் எழுந்தன. திருச்சி கருமண்டபம் சிங்கராயர் நகர் பகுதியில் தி சைன் என்ற ஸ்பாவில் தொழில் நடப்பதாக சில நாட்களுக்கு முன் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற விபச்சார தடுப்பு பிரிவு பொறுப்பு காவல் ஆய்வாளர் கருணாகரன் ஸ்பா சென்டரில், அங்கிருந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டார். அதில், அங்கு, உரிய அனுமதியின்றி பல ஆண்டுகளாக ஸ்பா இயங்கி வருவதுடன், பாலியல் தொழில் நடந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட 2 பெண்களை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலாளர் பெண்ணை கைது செய்தனர். இந்த ஸ்பா வயலூர் பகுதியைச் சேர்ந்த செந்திலுக்கு சொந்தமானதும், அவர் விஜய் மக்கள் இயக்கத்தின் திருச்சி மத்திய பகுதி நிர்வாகி என்ற தகவல் வெளியானது. இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் தலைமறைவானார். புதுச்சேரியில் அவர் இருப்பது போலீசாருக்கு தெரியவந்ததையடுத்து, பல நாட்களுக்குப் பிறகு புதுச்சேரியில் இன்று அவரை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரித்தபோது, சமீபத்தில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை நேரில் சந்தித்ததாக கூறியுள்ளார். இந்தச் சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.