விஷ சாராய மரண சம்பவத்தை விசாரணைக்கு எடுத்த ஐகோர்ட்!

Filed under: தமிழகம் |

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராயம் மரணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தற்போது இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் குடித்ததால் 60க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரண சம்பவத்தை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. கல்வராயன் மலைப்பகுதி மக்களின் பொருளாதார சமூக மேம்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது’ மேலும் இவ்வழக்கின் எதிர்மனுதாரர்களாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், மத்திய மாநில பழங்குடியினர் நலத்துறை மற்றும் டிஜிபி சேர்க்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது