வெறிச்சோடி காணப்படும் உக்கடம் மார்க்கெட்!

Filed under: தமிழகம் |

வெளிமாநிலங்களிலிருந்து வரவேண்டிய காய்கறிகள் கடந்த சில தினங்களாக பெய்யும் பருவமழை காரணமாக குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

குறிப்பாக தக்காளி சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது. அது மட்டுமின்றி இஞ்சி பீன்ஸ் ஆகியவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால், எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படும் உக்கடம் காய்கறி மார்க்கெட் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. தற்போதைய விலை நிலவரத்தின் படி தக்காளி கிலோ 100 ரூபாய், ஆப்பிள் தக்காளி 120, சின்ன வெங்காயம் கிலோ 200 ரூபாய், பூண்டு கிலோ 180 ரூபாய், இஞ்சி கிலோ 260 ரூபாய், கேரட் கிலோ 60, பீட்ரூட் கிலோ 40, கத்தரிக்காய் கிலோ 50, உருளைக்கிழங்கு கிலோ 30, முருங்கைக்காய் கிலோ 50, பெரிய வெங்காயம் கிலோ 25 என விற்பனை செய்யப்படுகிறது. அன்றாட சமையலுக்கு மிகவும் அத்தியாவசியமான தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி ஆகியவற்றின் விலை அதிகரித்தே காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் காய்கறிகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டாததால் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது. தக்காளியின் விலை முந்தைய நாட்களை விட குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.