வேட்புமனு வாபஸ் பெற இன்று கடைசி நாள்!

Filed under: அரசியல்,தமிழகம் |

வரும் ஏப்ரல் 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் சமீபத்தில் முடிவடைந்தது. வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் வாபஸ் பெற்றுக்கொள்ள இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை ஒவ்வொரு தொகுதிகளிலும் வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் மார்ச் 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைந்தது. 39 தொகுதிகளில் 1749 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்ட பின் 1085 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இன்றுடன் வாபஸ் பெரும் நாள் முடிவதால் இன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு வேட்பாளர்களின் சின்னங்களும் அறிவிக்கப்படும். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பிறகு அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபடும்.