வேளாண் பட்ஜெட் குறித்து வானதி சீனிவாசன் கருத்து!

Filed under: அரசியல்,தமிழகம் |

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வேளாண் பட்ஜெட் ஏமாற்றத்தை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

இன்று விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தமிழக சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள் இந்த பட்ஜெட்டை வரவேற்று வருகின்றன. வேளாண் பட்ஜெட் குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவுமில்லை, வேளாண் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இல்லை. மேலும் தமிழ்நாட்டில் வேளாண் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது. அறுவடை கரும்புக்கு நிதி பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். மேலும் வேளாண் பட்ஜெட்டில் தென்னை விவசாயிகளுக்கு எந்தவித அறிவிப்பும் இல்லை. மொத்தத்தில் வேளாண் பட்ஜெட் ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் ஏமாற்றம்” என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.