“வேள்பாரி” முன்று பாகங்களாக உருவாகிறதா?

Filed under: சினிமா |

எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை இயக்குனர் ஷங்கர் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது. “பாகுபலி” மற்றும் “பொன்னியின் செல்வன்” போன்ற வரலாற்று படங்களின் வெற்றியையடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

இப்படத்தில் யாஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் முதலில் இரண்டு பாகங்களாக உருவாக இருந்த இந்த மெஹா பட்ஜெட் திரைப்படம் இப்போது 3 பாகங்களாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.