ஷங்கருக்கு எதிராக டுவீட் போடும் ராம்சரண் ரசிகர்கள்!

Filed under: சினிமா |

“கேம்சேஞ்சர்” திரைப்படத்தை ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிப்பில் ஷங்கர் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். இத்திரைப்படத்துக்காக கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதித் தந்துள்ளார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் பெருமளவுக்கு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்தாண்டு தொடங்கப்பட்ட படம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

அதற்குக் காரணம் இயக்குனர் ஷங்கர் “இந்தியன்” படத்தையும் அடுத்தடுத்து இயக்கி வருவதுதான். “இந்தியன் 2” இப்போது மூன்றாவது பாகமும் வர இருப்பதால் மேலும் அந்த படத்தின் ஷூட்டிங் நாட்கள் அதிகமாகியுள்ளன. இதனால் “கேம்சேஞ்சர்” திரைப்படத்தை முடிப்பதில் இன்னும் தாமதமாகும் என சொல்லப்படுகிறது. இந்த படம் தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் எந்தவொரு அப்டேட்டும் கொடுக்கப்படவில்லை. இதனால் கடுப்பான ராம்சரண் ரசிகர்கள் இப்போது எக்ஸ் தளத்தில் #Irresponsibleshankar
என்ற ஹேஷ்டேக்கோடு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி திட்டி வருகின்றனர்.