10ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள்!

Filed under: தமிழகம் |

சமீபத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு எழுதிய மாணவர்களில் 94 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர். குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான மறு தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது, அதற்கான விண்ணப்பம் பூர்த்தி செய்யும் தேதியும் அறிவிக்கப்பட்டது.

12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து இன்று 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. இன்று காலை தேர்வு முடிவுகள் 9 மணிக்கு தேர்வு துறை இயக்குனர் இந்த முடிவை வெளியிடவுள்ளார். இந்த முடிவை காண 10ம் வகுப்பு தேர்வு எழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். அதன்படி தேர்வின் முடிவுகள் வெளியானது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஒருபுறம் சந்தோஷமாக இருக்கும் நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் வருத்தத்தில் இருப்பார்கள் என்ற நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மே 13ம் தேதி முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்கள் தவறான முடிவு எடுக்காமல் இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.