12ம் வகுப்பு மாணவி தற்கொலை!

Filed under: தமிழகம் |

12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழகம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் தற்போது மற்றொரு 12ம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் இன்று 12ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து அப்பள்ளிக்கு உடனடியாக கல்வி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விரைந்து சென்று மாணவி தற்கொலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அதிகாரிகள் என யாரும் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி தற்கொலை சம்பவத்திற்கு முதல் மூன்று நாட்கள் வரவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து கீழச்சேரியில் பள்ளி மாணவி தற்கொலை செய்த ஒரு சில மணி நேரங்களில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடனடியாக கீழச்சேரி சென்று உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இன்னொரு கள்ளக்குறிச்சி சம்பவம் போல் நடக்கக்கூடாது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வரப்பட்டு வருகிறது.