+2 மாணவியை கர்ப்பமாக்கிய கட்டிட மேஸ்திரி!

Filed under: தமிழகம் |

பள்ளியில் படிக்கும் சிறுமியை கட்டிட மேஸ்திரி வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் கிருஷ்ணகிரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள மூங்கிலேரி கிராமத்தை சேர்ந்த காளிதாஸ் கட்டிட மேஸ்திரி. காளிதாஸுக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. காளிதாஸ் வீட்டிற்கு அருகில் 16 வயதான ப்ளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வந்துள்ளார். காளிதாஸின் குழந்தையை கொஞ்சி விளையாடுவதற்காக அடிக்கடி அவர் காளிதாஸ் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்படியாக ஒரு தடவை மாணவி சென்றபோது வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்திக் கொண்டு மாணவியை கட்டாயப்படுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் காளிதாஸ். இதுகுறித்து யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன மாணவி யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார். சமீபமாக சிறுமியின் உடல் நிலையில் மாற்றங்கள் தென்பட்ட நிலையில் சிறுமியின் பெற்றோர்கள் அவரை மருத்துவமனை அழைத்து சென்றுள்ளனர். அப்போதுதான் அவர் 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இறுதியாக மாணவி நடந்ததை பெற்றோரிடம் சொல்ல இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். அதன்பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார் காளிதாஸை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.