3வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!

Filed under: அரசியல்,இந்தியா |

கடந்த இரண்டு நாட்களாக நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதானி விவகாரம் காரணமாக தொடர்ந்து 3வது நாளாக முடங்கியுள்ளது.

அதானி விவகாரம் காரணமாக எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் முடங்கியது. இன்று மூன்றாவது நாளாக நாடாளுமன்றம் தொடங்கிய நிலையில் மீண்டும் அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மூன்றாவது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடங்கியதாக தெரிகிறது. ஒரு பக்கம் பாஜக ராகுல் காந்தி மீது உரிமை பிரச்சினையை பாஜக கொண்டு வர இன்னொரு பக்கம் எதிர்க்கட்சிகள் அதானி முழும முறைகேடுகள் கொடுத்து விசாரிக்க வேண்டும் என்று முழங்கி வருகின்றனர். இதையடுத்து இன்று இரு அவைகளும் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதானி குழும முறைகேடு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க எதிர் கட்சிகள் வலியுறுத்தி வருகிறது. லண்டனில் ராகுல் காந்தி பேசிய பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். இரு தரப்பும் அமளியில் ஈடுபட்டு வருவதால் நாடாளுமன்ற வளாகம் தம்பித்துள்ளது.