4 சிறுமிகளுக்கு திருமணம்; அதிரடி நடவடிக்கை எடுத்த நடவடிக்கை!

Filed under: தமிழகம் |

ஒரே இடத்தில் நான்கு சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்த போது அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து அந்த சிறுமிகளை காப்பாற்றி காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இன்று ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பகுதியை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் 18 வயது நிரம்பாத நான்கு சிறுமிகளுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நான்கு சிறுமிகளின் பெற்றோரிடம் அறிவுரை வழங்கி குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என திருமணத்தை தடுத்து நிறுத்தினர். அந்த நான்கு சிறுமிகளையும் வேலூர் காப்பகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் குழந்தை திருமணம் குறித்து போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லை என்றும் அதனால் தான் பதினெட்டு வயதுக்கு குறைவான சிறுமிகளுக்கு திருமணம் நடைபெறுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனை அடுத்து ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தை திருமணம் சட்டப்படி தவறு என்ற விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.