5 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன் பிடித்திருவிழா!

Filed under: தமிழகம் |

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஒன்றியம் குராயூர் கிராமத்தில் அமைந்துள்ள பெரிய கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

கண்மாயில் கடந்த இரு மாதங்களாக தண்ணீர் இன்றி வறண்ட நிலையில், தேங்கிய நீரில் ஏராளமான மீன்கள் இருந்தன. அவற்றை குராயூர், மொச்சிகுளம், மருதங்குடி, சென்னம்பட்டி, இலுப்பக்குளம், வேப்பங்குளம், திருமால், ஓடைப்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் குறவை, கெளூர், கட்லா, கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் கிடைத்தன. இதனை ஏராளமானோர் பிடித்துச் சென்று மகிழ்ந்தனர். இதில் சிறுவர் சிறுமி முதல் பெரியோர்கள் வரை கலந்து கொண்டு மீன்களைப் பிடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். இது குறித்து விவசாயிகளிடம் கேட்டபோது “நான்கு கிலோ முதல் ஐந்து கிலோ வரை மீன்கள் சிக்கியது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு கணமாயில் நீர் பெருகி இருந்ததால் இந்தாண்டு எதிர்பாராத விதமாக மீன்கள் அதிக அளவில் கிடைத்தது. இதனை எடுப்பதற்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அவர்களுக்கு வேண்டிய மீன்களை சந்தோஷத்துடன் மீன்பிடி திருவிழா மூலம் எடுத்துச் சென்றோம்” என தெரிவித்தனர்.