கத்தரிக்கோலை பிரசவம் முடிந்து வயிற்றில் வைத்து தைத்த டாக்டர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு அறுவை சிசிச்சையின் மூலம் குழந்தை பிறந்தது. அப்போது போடப்பட்ட தையலின் போது வயிற்றுக்குள்ளேயே கத்திரிக்கோலை வைத்து தைத்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். தற்போது வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. இவ்வழக்கில் ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.