கடந்த 1901ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு முன்கூட்டியே கோடை வெப்பம் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டை காட்டிலும் இவ்வாண்டு கோடை காலம் முன்கூட்டியே தொடங்கும் என்றும் இவ்வாண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நூறு வருடங்களுக்கு பின்னால் பிப்ரவரி மாதத்தில் அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளதையடுத்து இவ்வாண்டு கோடை கொடூரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மார்ச் முதல் மே வரையிலான காலகட்டத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அக்னி நட்சத்திர நேரத்தில் வீட்டை விட்டு போதுமானவரை வெளியே வராமல் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
நாளை முதல் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம்- என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா?
ஸ்டாலினை பாராட்டி மதுரையில் அழகிரி ஆதரவாளர் போஸ்டர்.
மகளிர் தின விழாவையொட்டி புத்தூர் விழியிழந்தோர் பள்ளியில் மாணவிகளுக்கு உதவிகள்.
வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதில் தாமதமானதால் தேனியில் செய்தியாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரை...



