காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஒ.எஸ்.ஆர் ஷர்மிளா காங்கிரஸ் கட்சிதான் இந்தியாவின் மிகப்பெரிய மதசார்பற்ற கட்சி என தெரிவித்துள்ளார்.
இன்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒ.எஸ்.ஆர் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம், “காங்கிரஸ் கட்சி தான் நாட்டின் மிகப்பெரிய மதசார்பற்ற கட்சி என்றும் இந்தியாவின் உண்மையான கலாச்சாரத்தை நிலை நிறுத்தி நமது தேசத்தின் அடித்தளத்தை எழுப்புகிறது. முன்னதாக ஒ.எஸ்.ஆர் ஷர்மிளா காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூர்னே கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன். ஒ.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து விட்டேன்.” என்று கூறினார். இதையடுத்து அவருக்கு காங்கிரஸ் கட்சியில் ஒரு பெரிய பதவி அளிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.