நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் வீட்டில் வாடகைக்கு இருந்தவர் தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் தனுஷின் போயஸ் தோட்டத்தில் கடந்த 2022ம் ஆண்டு அஜய் என்பவர் வீட்டில் வாடகைக்கு இருந்தார். அந்த வீட்டை தனுஷ் வாங்கியிருப்பதாகவும் உடனடியாக அந்த வீட்டிடை காலி செய்ய வேண்டும் என்றும் தனுஷ் தரப்பினர் கூறியுள்ளனர். இதையடுத்து அஜய் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் 2024ம் ஆண்டு ஜனவரி வரை தங்களுக்கு வாடகை ஒப்பந்த பத்திரம் இருப்பதாகவும் எனவே தனுஷ் காலி செய்ய சொல்ல உரிமை இல்லை என்றும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை கடந்து செல்ல மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது தனுஷ் தரப்பு நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது. இம்மனுவில் வாடகைக்கு இருந்தவருக்கும் தங்களுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதாகவும் வாடகைக்கு இருந்த அஜய் வீட்டை காலி செய்துவிட்டு சாவியை ஒப்படைத்து விட்டதாகவும் எனவே இவ்வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இவ்வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.