முன்னாள் அதிமுக அமைச்சர் மீதான வழக்கை சிபிசிஐடி க்கு மாற்ற நடிகை மனு.
நடிகை சாந்தினி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கினார். பின்னர் கருவை கலைக்குமாறு மிரட்டினார்.
இது தொடர்பான புகாரை, மணிகண்டன் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வழக்கு பதிவு செய்ய விடாமல் தடுத்து விட்டார். எனவே, வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.