Home » Entries posted by Ramesh M
Entries posted by Vaalmihi

ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்தின் பின்பக்க டயரில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு.

ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்தின் பின்பக்க டயரில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு. மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்தில் தீப்பிடித்ததால் உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டனர். திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி ஊழியர்கள் டயரில் பற்றிய தீயை அணைத்த பின்னர், மதுரை பணிமனைக்கு பேருந்து கொண்டு செல்லப்பட்டது. அந்த மார்க்கத்தில் செல்லும் வேறு அரசு பேருந்துகளில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சிகிச்சை பலனின்றி மரணம்.

Comments Off on திருவண்ணாமலை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சிகிச்சை பலனின்றி மரணம்.

திருவண்ணாமலை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சிகிச்சை பலனின்றி மரணம். பெங்களூரு கெம்பேகவுடா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த திருவண்ணாமலை மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) திரு.செ.ஆசைதம்பி அவர்கள் இன்று 12-05-2024 அதிகாலை 5:00 மணி அளவில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.

Continue reading …

தேனி கலெக்டருக்காக காத்திருந்த கெளமாரியம்மன் தேர். தாமதமாக தொடங்கிய தேரோட்டம்.

Comments Off on தேனி கலெக்டருக்காக காத்திருந்த கெளமாரியம்மன் தேர். தாமதமாக தொடங்கிய தேரோட்டம்.

தேனி கலெக்டருக்காக காத்திருந்த கெளமாரியம்மன் தேர். தாமதமாக தொடங்கிய தேரோட்டம். தேனி அருகே வீரபாண்டியில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது ஆண்டு தோறும் நடைபெறும் கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான சித்திரை பெருந்திருவிழா கடந்த மாதம் 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட […]

Continue reading …

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கார் டயர் வெடித்து கோர விபத்து – 3 பேர் உயிரிழந்த சோகம்

Comments Off on கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கார் டயர் வெடித்து கோர விபத்து – 3 பேர் உயிரிழந்த சோகம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கார் டயர் வெடித்து கோர விபத்து – 3 பேர் உயிரிழந்த சோகம். தஞ்சையில் இருந்து திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியே புதுச்சேரிக்கு காரில் சுற்றுலா திட்டக்குடி அருகே எழுத்தூர் கிராமத்தில் காரின் டயர் வெடித்து பயங்கர விபத்து காரில் பயணித்த பெண், சிறுமி உள்ளிட்ட 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த பரிதாபம் காயம் அடைந்த மேலும் 5 பேருக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

Continue reading …

அடுத்து ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து, விருதுநகர் விபரீதம்.

Comments Off on அடுத்து ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து, விருதுநகர் விபரீதம்.

அடுத்து ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து, விருதுநகர் விபரீதம். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரம் புதூரில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து. பட்டாசு தயாரிப்பதற்கான ரசாயன மூலப்பொருள் வைக்கப்பட்டிருந்த அறையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின. காலை நேரத்தில் விபத்து ஏற்பட்ட நிலையில், தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு. விருதுநகர் மாவட்டத்தில் இந்த மாதத்தில் மட்டும் 5வது முறையாகப் பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.

Continue reading …

திண்டுக்கல் விளாம்பட்டி காவல் ஆய்வாளர் வீட்டில் 250 பவுன்,ரூ.5 லட்சம் திருட்டு.

Comments Off on திண்டுக்கல் விளாம்பட்டி காவல் ஆய்வாளர் வீட்டில் 250 பவுன்,ரூ.5 லட்சம் திருட்டு.

திண்டுக்கல் விளாம்பட்டி காவல் ஆய்வாளர் வீட்டில் 250 பவுன்,ரூ.5 லட்சம் திருட்டு. திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ஷர்மிளா இவருடைய மதுரை பாசிங்காபுரம், மீனாட்சிநகரில் உள்ள வீட்டில் 250 பவுன் தங்க நகை, ரூ.5 லட்சம் திருடிய மர்ம நபர்களை அலங்காநல்லூர் காவல்துறையினர் தேடி வருகின்றனர்

Continue reading …

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Comments Off on 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்ப 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அத்தியாவசியமான பொருள்களை தரமான எடையாகவும் பொட்டலமாகவும், வழங்கிட வேண்டும் என்றும் , சரியான எடையில் அத்தியாவசியமான பொருட்களை இறக்காமல் அபராதம் […]

Continue reading …

கம்பத்தில் பன்னிரண்டாம் வகுப்பில் 494 மதிப்பெண் எடுத்த பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை.

Comments Off on கம்பத்தில் பன்னிரண்டாம் வகுப்பில் 494 மதிப்பெண் எடுத்த பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை.

கம்பத்தில் பன்னிரண்டாம் வகுப்பில் 494 மதிப்பெண் எடுத்த பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை. தேனி மாவட்டம் கம்பம் கிளப் ரோடு மணி நகரத்தில் குடியிருக்கும் கண்ணன் மகன் ஜெயாவர்மன் (வயது 17) இவர் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.  தற்பொழுது நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 க்கு 494 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாணவன் வீட்டில் தனியாக இருந்த பொழுது தனது வீட்டின் மூன்றாவது மாடியில் தூக்கிட்டு […]

Continue reading …

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

Comments Off on பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு எழுதிய 8,94,264 பேரில் 8,18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் – 91.55% கடந்த ஆண்டு 91.39% பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது தேர்ச்சி விகிதம் சற்றே அதிகரிப்பு தேர்வு எழுதியவர்களில் 4,22,591 மாணவிகளும், 3,96,152 மாணவர்களும் தேர்ச்சி மாணவிகள் – 94.53%, மாணவர்கள் 88.58% = இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே தேர்ச்சி விகிதத்தில் முந்தினர்.

Continue reading …

டாஸ்மாக் மது கடையை மூடக்கோரி பூரிப்புரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

Comments Off on டாஸ்மாக் மது கடையை மூடக்கோரி பூரிப்புரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

டாஸ்மாக் மது கடையை மூடக்கோரி பூரிப்புரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம். ஆரம்ப சுகாதார நிலையம் வந்த கர்ப்பிணி பெண் மீது மதுபாட்டில் வீசப்பட்டதால் மதுரை உயர்நீதிமன்ற கிளை 8 வாரங்களில் டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்டும் இதுவரை டாஸ்மாக் கடையை மூடவில்லை என பெண்கள் குற்றச்சாட்டு தேனி மாவட்டம், போடி தாலுகா, பூரிபுரம் பேரூராட்சி பகுதியில் டாஸ்மாக் கடை எண் 8612 செயல்பட்டு வரக்கூடிய மதுபான கடையை மூடக்கோரி பூதிப்புரம் பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் […]

Continue reading …
Page 1 of 39123Next ›Last »