
பாமக அதிமுக கூட்டணியில் கிட்டத்தட்ட இணைந்து விட்டதாக கூறப்படுகிறது. திடீரென பாஜக உடன் ரகசிய பேச்சுவார்த்தை நடந்ததாகவும், சென்னையில் உள்ள ராமதாஸ் மகள் வீட்டில் எல் முருகன் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் ரகசியமாக பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக மற்றும் தேமுதிக எந்த கூட்டணியில் சேர இருக்கிறது என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் இரு கட்சிகளும் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை கிட்டத்தட்ட முடித்து விட்டதாகவும் விரைவில் அறிவிப்பு […]
Continue reading …
மதுரையில் மார்ச் 10ம் தேதி கனிமொழி தலைமையில் மாபெரும் மகளிர் மாநாடு நடத்த அறிவிக்கப்பட்டிருந்தது. திடீரென அந்த மாநாட்டை திண்டுக்கல்லுக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருந்த கனிமொழிக்கு இது குறித்த தகவல் சொன்னபோது எதற்காக இடத்தை மாற்றினீர்கள் என்று கேட்டிருக்கிறார். ஆனால் மாவட்ட நிர்வாகிகள் சரியாக பதில் சொல்லாத நிலையில் கடைசியில் மேலிட உத்தரவு தான் காரணம் என்று கனிமொழிக்கு தெரிய வந்ததும் உச்சகட்ட கடுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அந்த மேலிடம் உதயநிதி […]
Continue reading …
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கென புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என்றும், அதன் மூலமே உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது. கடந்த 8ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை நடிகரும், அக்கட்சியின் தலைவருமான விஜய் அறிமுகப்படுத்தினார். மேலும், மே மாதத்திற்குள் அதிக […]
Continue reading …
அதிமுகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த தேமுதிக, தற்போது பாஜகவுடன் கூட்டணி குறித்து பேச வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. நெருங்கி வரும் மக்களவை தேர்தலுக்காக தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் மிகுந்த தீவிரம் காட்டி வருகின்றன. தேமுதிகவில் தலைவர் விஜயகாந்த் மறைந்த நிலையில் அவரது பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த முறை மாநிலங்களவை சீட் கண்டிப்பாக வேண்டும் என்பதில் பிரேமலதா விஜயகாந்த் உறுதியாக உள்ளார். […]
Continue reading …
கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று கண்டுபிடித்து சொல்வது சட்டவிரோதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.20,000 பெற்று கருவில் இருக்கும் குழந்தை குறித்த தகவலை சட்டவிரோதமாக கூறிய ஓய்வு பெற்ற நர்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காந்திமதி என்ற ஓய்வு பெற்ற நர்ஸ் கர்ப்பிணி பெண்கள் கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்று சட்டவிரோதமான முறையில் தெரிவித்து இதற்காக அவர் இருபதாயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டதாக தெரிகிறது. கடந்த ஐந்து […]
Continue reading …
கிருத்திகா உதயநிதி ஜெயம் ரவி நடிக்கும் 33வது திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்துக்கு பழைய ஹிட் படத்தின் டைட்டிலான ‘காதலிக்க நேரமில்லை’ என்ற தலைப்பை வைத்துள்ளனர். ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். படத்தின் பெரும்பாலான […]
Continue reading …
“அனிமல்” திரைப்பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து இயக்கிய திரைப்படம். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். “அனிமல்” திரைப்படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் இந்த படம் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. படத்தை விட இயக்குனர் சந்தீப் ரெட்டி தரும் பேட்டிகள் மிகவும் ஆணாதிக்கத் தன்மை கொண்டதாக உள்ளதாக […]
Continue reading …
மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதி சாதனை படைத்த ‘மகாகவிதை’ நூலுக்கு ‘பெருந்தமிழ் விருது’ இந்த விருதை இணைந்து வழங்குகிறது. மலேசியாவில் இந்த விருது வழங்கும் விழா டாக்டர் எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில் டத்தோ எம்.சரவணன் முன்னிலையில் வழங்கப்படுகிறது. இவ்விருதினைப் பெற்றுக் கொள்ள மலேசியா வந்தடைந்தார் கவிப்பேரரசு வைரமுத்து மலேசியா வந்த கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு ‘டத்தோ’ எம்.சரவணன் தலைமையில் விமான நிலையம் முதல் தங்கி இருக்கும் விடுதி வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
Continue reading …
மதுரை கோச்சடைப் பகுதியைச் சேர்ந்த முத்துக் கார்த்திக் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது மனைவி முருக பூபதி (வயது 30). மற்றும் 2 வயது பெண் குழந்தை முத்து மீனாவுடன் அந்தப் பகுதியில் வசித்து வந்தார். கணவர் முத்துக் கார்த்திக், பால் வியாபாரத்திற்கு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த முருக பூபதி, தனது 2 வயது மகள் முத்து மீனா மீது மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்துக் கொன்று, தன் மீதும் கொடூரமாக […]
Continue reading …
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அஜீத்துக்கு நேற்று மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக செய்தி வெளியானது. இது முழுக்க முழுக்க பொய் என்று அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். நேற்று காலை நடிகர் அஜீத் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாதாரண மருத்துவ பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. ஆனால் நேற்றிரவு திடீரென அஜீத்தின் மூளையில் சிறிய அளவில் கட்டி இருந்ததாகவும் அதை அகற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் இன்னும் இரண்டு நாட்களில் அவர் […]
Continue reading …