Home » Entries posted by Shankar U (Page 117)
Entries posted by Shankar

2 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

Comments Off on 2 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

மழை காலம் மற்றும் குளிர்கால முடிவடைந்து தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் மட்டும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இரண்டு மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய இரு மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் […]

Continue reading …

பரந்தூர் விமான நிலையத்திற்கான நில எடுப்புக்கான அறிவிப்பு!

Comments Off on பரந்தூர் விமான நிலையத்திற்கான நில எடுப்புக்கான அறிவிப்பு!

பரந்தூர் விமான நிலையம் அமைக்க கடும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. நிலத்தை எடுப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. புதிதாக விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ளது. இதற்காக பரந்தூர் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்த அக்கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விமான நிலைய அறிவிப்பு வெளியான நாள் முதல் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய விமான நிலையம் அமைக்க, நிலங்களை கையகப்படுத்தும் அரசாணையை கடந்த வருடம் […]

Continue reading …

ஜெயலலிதாவிடம் பாடம் படித்தவர் எடப்பாடி; பா.வளர்மதி

Comments Off on ஜெயலலிதாவிடம் பாடம் படித்தவர் எடப்பாடி; பா.வளர்மதி

எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் இருந்து பாடம் படித்தவர். தேர்தல் நேரத்தில் எப்படி எல்லாம் அரசியல் யுக்திகளை கையாண்டு வெற்றி பெற வேண்டும் என்று அவருக்கு மட்டுமே தெரியும் என அதிமுக மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி கூறியுள்ளார். இன்று அதிமுக மகளிர் அணி செயலாளர் வளர்மதி செய்தியாளர்களிடம், “தேர்தல் தொடர்பாக அறிவுபூர்வமாக சிந்தித்து முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறந்த முடிவை எடுப்பார். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எம்ஜிஆர் மற்றும் […]

Continue reading …

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

Comments Off on தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சட்ட விரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பிய விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எப்படி ரிட் தாக்கல் செய்ய முடியும்? என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டாமா? என கேள்வி நீதிபதிகள் எழுப்பினர். இந்த விசாரணையில் மாவட்ட ஆட்சியர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல, விசாரணைக்காக மட்டுமே சம்மன் அனுப்பப்பட்டது என அமலாக்கத்துறை வாதம் செய்தது. ரிட் தாக்கல் செய்ய […]

Continue reading …

வெள்ள பாதிப்பு ரூ.6000 கிடைக்கவில்லை; சென்னை மக்கள் புலம்பல்!

Comments Off on வெள்ள பாதிப்பு ரூ.6000 கிடைக்கவில்லை; சென்னை மக்கள் புலம்பல்!

சென்னையில் உள்ள அனைவருக்கும் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது 6000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் பலருக்கு 6 ஆயிரம் ரூபாய் சென்று சேரவில்லை என சென்னை மக்கள் புலம்பி வருகின்றனர். சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக ஏராளமானோர் தங்களது உடைமைகளை இழந்தனர். இதையடுத்து வெள்ள நிவாரணமாக சென்னையில் உள்ள […]

Continue reading …

205 கிலோ குட்கா கடத்தல்!

Comments Off on 205 கிலோ குட்கா கடத்தல்!

போலீசார் திருவள்ளூர் அருகே வாகனத்தில் கடத்தி வந்த 205 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்ததோடு கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர். செவ்வாப்பேட்டை போலீசாருக்கு திருவள்ளுர் அடுத்த காக்களூர் பகுதியில் வாகனத்தில் கடத்தி வந்த குட்கா பொருட்களை மற்றொரு வாகனத்தில் மாற்றப்பட்டு திருநின்றவூர் நோக்கி கொண்டு செல்லப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து செவ்வாப்பேட்டை தனிப்படை போலீசார் அந்த வாகனத்தை பின் தொடர்ந்து துரத்தி சென்று பிடித்து, காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது வாகனத்தில் […]

Continue reading …

மாற்று திறனாளிகளுக்கு முக்கியத்துவம்! உதயநிதி ஸ்டாலின்!

Comments Off on மாற்று திறனாளிகளுக்கு முக்கியத்துவம்! உதயநிதி ஸ்டாலின்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் சர்வதேச, தேசிய மற்றும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்க தொகைக்கான காசோலை மற்றும் 3 சதவீத விளையாட்டு வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டிற்கு கீழ் 4 வீராங்கனைகளுக்கு அரசு பணி ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி […]

Continue reading …

அனுஷ்காவின் 50வது படத்தின் இயக்குனர் யார்?

Comments Off on அனுஷ்காவின் 50வது படத்தின் இயக்குனர் யார்?

நடிகை அனுஷ்கா தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த “அருந்ததி,” “ருத்ரமாதேவி” போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது. அனுஷ்கா கடைசியாக “பாகுபலி” திரைப்படத்தில் நடித்த பின்னர் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. மேலும் அவரின் உடல் எடையும் ஏறி குண்டாக காணப்பட்டார். அதனால் அவர் சினிமாவை விட்டு விலகி எடைகுறைப்பில் ஈடுபட்டார். கடைசியாக அவர் தெலுங்கில் “மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்திருந்தார். […]

Continue reading …

“லால் சலாம்” சக்சஸ் மீட்!

Comments Off on “லால் சலாம்” சக்சஸ் மீட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’ படத்தின் சக்சஸ் மீட்டிங் இன்று நடந்த நிலையில் இந்த சக்சஸ் மீட்டிங்கில் இரண்டு முக்கிய நடிகர்கள் கலந்து கொள்ளாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “லால் சலாம்” திரைப்படம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவானது. இத்திரைப்படம் சமீபத்தில் வெளியானது. முதல் நாளே நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்ததால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. மேலும் இத்திரைப்படத்தால் தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கு மிகப்பெரிய […]

Continue reading …

மறைமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை; தேமுதிக திட்டவட்டம்!

Comments Off on மறைமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை; தேமுதிக திட்டவட்டம்!

தேமுதிக வாய்ப்பு கிடைத்தால் திமுகவோ, அதிமுகவோ யாருடனாவது கூட்டணி வைப்போம் என்று தெரிவித்துள்ளது. விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமாகி உள்ளது. திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இத்தேர்தலில் தனித்தனியே களம் காணும், அதிமுகவும், பாஜகவும், பாமக, தேமுதிக உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தேமுதிக எந்த பக்கம் செல்லும் என்பது இதுவரைக்கும் புரியாத புதிராக […]

Continue reading …