Home » Entries posted by Shankar U (Page 123)
Entries posted by Shankar

பட்டாசு ஆலை வெடிவிபத்து! 9 பேர் பலி!

Comments Off on பட்டாசு ஆலை வெடிவிபத்து! 9 பேர் பலி!

சமீப காலமாக தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகிலுள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பெண்கள் 4 ஆண்கள் உள்ளிட்ட 9 பேர் பலியாகி உள்ளனர். விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே முத்துசாமிபுரத்தில் விஜய் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்படுகிறது. இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென மருந்துகள் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில் 5 […]

Continue reading …

திமுகவுடன் தான் கூட்டணி! துரைவைகோ உறுதி!

Comments Off on திமுகவுடன் தான் கூட்டணி! துரைவைகோ உறுதி!

மதிமுக தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைவைகோ பங்கேற்றார். நிகழ்ச்சியில் துரை வைகோ, “தேர்தல் பத்திரம் மூலமாக தேர்தல் நிதியை கார்ப்பரேட் நிறுவனங்கள் பாஜக விற்கு கொடுத்துள்ளதாகவும் தேர்தல் பத்திரம் கொடுப்பது செல்லாது எனவும் 2018 முதல் இன்று வரை பெறபட்ட நிதியை திருப்பி செலுத்த வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பாஜக அரசுக்கு கொடுத்திருக்க கூடிய சம்மட்டி […]

Continue reading …

செந்தில் பாலாஜியின் காவல் 21வது முறை நீட்டிப்பு!

Comments Off on செந்தில் பாலாஜியின் காவல் 21வது முறை நீட்டிப்பு!

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 20-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அவரது நீதிமன்ற […]

Continue reading …

தமிழகம் வரும் பிரதமர் மோடி; தேதியில் மாற்றம்!

Comments Off on தமிழகம் வரும் பிரதமர் மோடி; தேதியில் மாற்றம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கான தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், தேதி பற்றிய விவரங்கள் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். வருகிற 25-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று பேச உள்ளதாக பா.ஜ.க. கட்சித் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இக்கூட்டத்துக்காக தமிழகம் முழுதும் இருந்து சுமார் 10 லட்சம் தொண்டர்களை திரட்டவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பிரதமர் […]

Continue reading …

முன்னாள் எம்.எல்.ஏவை ஏமாற்றிய போலி அமித்ஷா!

Comments Off on முன்னாள் எம்.எல்.ஏவை ஏமாற்றிய போலி அமித்ஷா!

மத்திய அமைச்சர் அமித்ஷா போல பேசி முன்னாள் எம்.எல்.ஏவிடம் மர்ம கும்பல் பேசி பண மோசடி செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவை சேர்ந்த கிஷன்லால் உத்தர பிரதேசத்தில் கடந்த ஆட்சியில் எம்.எல்.ஏவாக இருந்தவர். சமீபத்தில் கிஷன்லாலுக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் பேசியவர் தன்னை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எனவும், நாடாளுமன்ற தேர்தலில் கிஷன்லாலுக்கு எம்.பி சீட் தர தயாராக உள்ளதாகவும், அதற்கு அவர் சில லட்சங்கள் தர வேண்டும் […]

Continue reading …

கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் யார்?

Comments Off on கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் யார்?

வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழக பாஜகவின் மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென அவருக்கு கவர்னர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும், கன்னியாகுமரி தொகுதிக்கு பெண் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பொன் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இணை அமைச்சரானார். மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பாஜக தேசிய தலைமை அவரை மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக […]

Continue reading …

அதிமுகவுடன் ஜி.கே.வாசன் பேச்சுவார்த்தை தோல்வி!

Comments Off on அதிமுகவுடன் ஜி.கே.வாசன் பேச்சுவார்த்தை தோல்வி!

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் அதிமுகவை எப்படியாவது பாஜக கூட்டணிக்கு கொண்டுவர தீவிர முயற்சி செய்தார். அதிமுக பிடிவாதமாக பாஜகவுடன் கூட்டணியில்லை என உறுதிபட கூறிவிட்டது. அடுத்த கட்டமாக பாஜக கூட்டணியில் ஜிகே வாசனின் தமாக கட்சி இணைய இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப் போவதாகவும் அதையடுத்து மேலும் சில நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் கட்டமாக பாட்டாளி மக்கள் கட்சியை பாஜக கூட்டணிக்கு கொண்டுவரும் முயற்சியை ஜிகே வாசன் எடுப்பார் என்றும் அதன் […]

Continue reading …

தேர்தலால் கவனிப்பாரற்றிருக்கும் வேங்கைவயல் விவகாரம்?

Comments Off on தேர்தலால் கவனிப்பாரற்றிருக்கும் வேங்கைவயல் விவகாரம்?

சமூக ஆர்வலர்கள் வேங்கை வயல் விவகாரம் நடந்து 415 நாட்களாகியும் இன்னும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படாத நிலையில் தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகளும் இவ்விவகாரத்தை கண்டுகொள்ளவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பகுதியில் உள்ள கிராமத்தில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவம் நடந்தது. இதையடுத்து 5 பிரிவுகளின் மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. ஆனால், இன்று வரை குற்றவாளிகள் […]

Continue reading …

மருதமலை கோவில் பாதையில் சிறுத்தை நடமாட்டம்!

Comments Off on மருதமலை கோவில் பாதையில் சிறுத்தை நடமாட்டம்!

வனத்துறை கோவை அருகே உள்ள மருதமலை முருகன் கோவில் பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பக்தர்களை எச்சரித்துள்ளது. அறுபடை வீடுகளுக்கு நிகரான முருகனின் வழிபாட்டு ஸ்தலமாக கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை முருகன் கோவில் உள்ளது. ஏராளமான பக்தர்கள் தினம்தோறும் மருதமலை முருகனை தரிசிக்க வந்த செல்கின்றனர். கந்த சஷ்டி மற்றும் கார்த்திகையை முன்னிட்டு மருதமலை முருகன் கோவில் செல்வோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மருதமலை கோவில் பாதையில் சிறுத்தை ஒன்று நடமாடுவது அங்கிருந்த கேமராக்களில் பதிவாகியுள்ளது. […]

Continue reading …

தேர்தல் காரணமாக தனுஷ் படத்தின் ரிலீஸில் மாற்றம்!

Comments Off on தேர்தல் காரணமாக தனுஷ் படத்தின் ரிலீஸில் மாற்றம்!

நடிகர் தனுஷ் தனது 50வது திரைப்படத்தை தானே இயக்கி ஷூட்டிங்கை முடித்துள்ளார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்துள்ளார். தற்போது இத்திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. படத்தை ஏப்ரல் 12ம் தேதி ரிலீஸ் […]

Continue reading …