Home » Entries posted by Shankar U (Page 130)
Entries posted by Shankar

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் – திமுக சாடல்!

Comments Off on மத்திய இணையமைச்சர் எல்.முருகன் – திமுக சாடல்!

வருகிற தேர்தலில் திமுகவின் முகமூடியை மக்கள் கிழித்தெறிவார்கள் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இன்று மக்களவையில் திமுக-வின் போலி திராவிட மாடல் சமூகநீதி பிம்பம் வெளிப்பட்டுள்ளது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் வாக்குகளுக்காக மட்டுமே அரசியல் செய்பவர்கள் திமுக-வைச் சேர்ந்த இந்த போலி திராவிட மாடல் சமூகநீதிக்காரர்கள். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்கும், அவர்களுக்குத் தேவையான திட்டங்களுக்கும் ஏற்ப பணி செய்ய […]

Continue reading …

மோடிக்கு ஆதரவாக உத்தவ் தாக்கரே பேச்சு!

Comments Off on மோடிக்கு ஆதரவாக உத்தவ் தாக்கரே பேச்சு!

உத்தவ் தாக்கரே இதுவரை பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். திடீரென நான் மோடிக்கு எதிரியில்லை என பேசியிருப்பது இந்தியா கூட்டணியினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. நிதிஷ்குமார் ஏற்கனவே இந்தியா கூட்டணியிலிருந்து விலகி உள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் தங்கள் மாநிலங்களில் தனித்து போட்டி என அறிவித்துள்ளனர். சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே “நான் மோடிக்கு எதிரியில்லை, ஆனால் மோடி தான் என்னை எதிரியாக பார்த்து வருகிறார். மோடிக்கு பிரச்சனை ஏற்பட்ட […]

Continue reading …

அரசு பேருந்தில் ஓட்டை! உயிர் தப்பிய பயணி!

Comments Off on அரசு பேருந்தில் ஓட்டை! உயிர் தப்பிய பயணி!

அரசு பேருந்து சென்னை, அமைந்தகரை அருகே சென்றுக்கொண்டிருந்த போது, பேருந்தில் பலகை உடைந்து பெண் ஒருவர் கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் அந்த பயணி உயிர் தப்பினார். திருவேற்காடு செல்லும் பெண்களுக்கான கட்டணமில்லா அரசு பேருந்து ஒன்று சென்னை அமைந்தகரை அருகே சென்று கொண்டிருந்தது. அப்பேருந்தில் இருந்த ஓட்டையை பலகை வைத்து மூடியுள்ளனர். அப்பேருந்தில் பயணித்த பெண் ஒருவர், பலகை உடைந்து அந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தார். அப்போது அந்த […]

Continue reading …

நேரு பற்றி பேச மோடிக்கு என்ன தகுதி! கே.எஸ் அழகிரி கண்டனம்!

Comments Off on நேரு பற்றி பேச மோடிக்கு என்ன தகுதி! கே.எஸ் அழகிரி கண்டனம்!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஸ் அழகிரி நேருவைப் பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவையில் நேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்களின் திறமையை நேரு, இந்திராகாந்தி நம்பவில்லை, நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தனர் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் கோயபல்ஸ் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார். குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது ஆயிரக்கணக்கான அப்பாவி இஸ்லாமியர்கள் படுகொலை செய்யபட்ட போது, […]

Continue reading …

மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கேரள முதலமைச்சர்!

Comments Off on மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கேரள முதலமைச்சர்!

கேரள அரசு மாநில அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதை எதிர்க்கும் பட்சத்தில் தமிழக முதலமைச்சர் கேரள அரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், “மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான கட்டுப்பாட்டைச் செயல்படுத்தி, மாநிலங்களின் குரல்வளையை நெரிக்க ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து, மாண்பமை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள […]

Continue reading …

முதலமைச்சர் சித்தராமையா நிர்மலா சீதாராமனுக்கு அழைப்பு!

Comments Off on முதலமைச்சர் சித்தராமையா நிர்மலா சீதாராமனுக்கு அழைப்பு!

சமீபத்தில் புதிய நாடாளுமன்றாத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தது. இதற்கு, காங்கிரஸ், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் தெரிவித்தனர். தென் மாநிலங்கள் தொடர்ந்து பாஜக அரசால் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. நிதிப்பங்கீட்டில் மத்திய அரசு தொடர்ந்து கர்நாடகாவுக்கு அநீதி இழைத்து மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கூறியதுடன், நாளை கர்நாடகம் அரசு சார்பில் டில்லியில் நடைபெறும் போராட்டத்தில் அமைச்சர் […]

Continue reading …

விஜய்க்கு வாழ்த்து கூறிய ஷாருக்கான்!

Comments Off on விஜய்க்கு வாழ்த்து கூறிய ஷாருக்கான்!

நடிகர் விஜய்க்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது புதிய அரசியல் கட்சியை அறிவித்து தனது அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், 2024ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், வரும் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் தான் தங்கள் இலக்கு என்று தெரிவித்திருந்தார். விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது புதிய கட்சிக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும், சினிமாத் துறையினரும் […]

Continue reading …

அண்ணாமலைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி!

Comments Off on அண்ணாமலைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக தொலைக்காட்சி நடத்துவதே மக்களிடம் இருந்து உண்மைகளை மறைக்கத்தான்- என்று கூறியுள்ளார். மேலும் அவர் வரும் 2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்த உடன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று கூறியிருந்தார். இதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “ஒரு ஒப்பீட்டுக்கு– தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் அரசுப் பணிகள் எண்ணிக்கை மொத்தம் சுமார் 9.5 லட்சம்… ஙியிறி கூறுவது என்னவென்றால், சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 […]

Continue reading …

மத்திய பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!

Comments Off on மத்திய பிரதேசத்தில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து!

பட்டாசு ஆலையில் எற்பட்ட வெடிவிபத்தில் 11 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.- உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மத்திய பிரதேச அரசு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளது. மத்திய பிரேதேசத்தில் முதலமைச்சர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள ஹர்தா பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் பலத்த காயமடைந்த 100 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]

Continue reading …

திமுக ஆலோசனைக் கூட்டம்!

Comments Off on திமுக ஆலோசனைக் கூட்டம்!

திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் மக்களவைத் தேர்தலையொட்டி வடசென்னை மற்றும் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன், ஆலோசனை நடத்தி வருகின்றனர். திமுக தலைமை ஜனவரி 24ம் தேதி முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை சென்னையில் நாடாளுமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி கிருஷ்ணகிரி, திருவள்ளூர், பொள்ளாச்சி, கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, […]

Continue reading …