Home » Entries posted by Shankar U (Page 134)
Entries posted by Shankar

நடிகர் சாந்தனுவின் உருக்கம்!

Comments Off on நடிகர் சாந்தனுவின் உருக்கம்!

சமீபத்தில் நடிகர் சாந்தனு நடிப்பில் வெளியான “ப்ளூ ஸ்டார்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தன் தந்தையுடன் அவர் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ஒரு நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அசோக் செல்வன் மற்றும் சாந்தனு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான படம் “ப்ளூ ஸ்டார்.” இத்திரைப்படத்தில் இவர்களுடன் இணைந்து, கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள், குமரவேல் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஜெயகுமார் இயக்கிய இப்படத்தை பா. ரஞ்சித் தயாரித்திருந்தார். இப்படம் கடந்த 25ம் தேதி வெளியானது. இப்படம் கிரிக்கெட் […]

Continue reading …

லவ்வர் படத்தின் அப்டேட்!

Comments Off on லவ்வர் படத்தின் அப்டேட்!

“குட்னைட்” திரைப்படம் கடந்தாண்டு மே மாதம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது. பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீசான இத்திரைப்படம் பலரது பாராட்டுகளையும் குவித்தது. இந்த படத்தில் “ஜெய்பீம்” புகழ் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். விறுவிறுப்பாக இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு “லவ்வர்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து படத்தின் […]

Continue reading …

பூண்டின் விலை கிடுகிடு உயர்வு!

Comments Off on பூண்டின் விலை கிடுகிடு உயர்வு!

பூண்டு வரத்து குறைந்துள்ளதால் பூண்டின் விலை உயர்ந்துள்ளது. பூண்டின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நாளுக்கு நாள் பூண்டின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ பூண்டு ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையாகி வந்தது. தற்போது அதிரடியாக விலை வேகமாக உயர்ந்து கிலோ ரூ.400 வரை உச்சம் தொட்டுள்ளது. சென்னை மார்க்கெட்டிற்கு அதிக அளவிலான பூண்டு கொள்முதல் உத்தரபிரதேசத்தில் இருந்தே நடக்கிறது. […]

Continue reading …

கத்தி முனையில் பட்டதாரி வாலிபர் கடத்தல்!

Comments Off on கத்தி முனையில் பட்டதாரி வாலிபர் கடத்தல்!

மர்ம நபர்கள் கத்தி முனையில் வாலிபர் ஒருவரை கடத்தி சென்ற சம்பவம் திருத்தணி அருகே உள்ள மக்களிடம் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுக்கா நத்தம் கிராமத்தில் முதுநிலை பட்டதாரி வாலிபர் வெங்கட முணி என்பவர் விவசாய வேலை செய்து வந்துள்ளார். திடீரென்று அந்த கிராமத்திற்கு சொகுசு காரில் பட்டாக்கத்திகளுடன் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், வெங்கட முனியை கத்தி முனையில் கடத்தி சென்றனர். தடுக்கச் சென்ற அவரது உறவினர்கள், நண்பர்களை […]

Continue reading …

கரன்சி நோட்டுகளை மாற்றி தருவதாக மோசடி!

Comments Off on கரன்சி நோட்டுகளை மாற்றி தருவதாக மோசடி!

ஈரான் நாட்டை சேர்ந்தவர் வெளிநாட்டு கரன்சிகளை மாற்றுவதாக கூறி வெளிநாட்டு பணத்தை திருடியதாக தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 26ம் தேதி மதுரை மாநகர் நேதாஜிரோடு பகுதியில் உள்ள SRS Forex என்ற நிறுவனத்தில் வெளிநாட்டு கரன்சி மாற்றுவது போல் நடித்து அங்கிருந்து வெளிநாட்டு பணம் திருடி சென்றதாக மதுரை திடீர்நகர் காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். குற்றவாளியை தேடி […]

Continue reading …

அமர் பிரசாத் ரெட்டி தலைமறைவா?

Comments Off on அமர் பிரசாத் ரெட்டி தலைமறைவா?

பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி பெண்ணை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இன்று அவரது முன் ஜாமின் மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அமர் பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுனர் மற்றும் பாஜக மகளிர் அணியை சேர்ந்த நிவேதா ஆகியோர் ஆண்டாள் என்ற பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரையும் அவரது சகோதரியையும் தாக்கியதாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக இருக்கும் நிலையில் […]

Continue reading …

தேர்தல் அதிகாரியின் அடையாள அட்டை காணவில்லை!

Comments Off on தேர்தல் அதிகாரியின் அடையாள அட்டை காணவில்லை!

தனது அடையாள அட்டையை காணவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கோட்டை போலீசாரிடம் புகாரளித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில், தேர்தல் அதிகாரிகள் தமிழகத்தில் மேற்கொண்டு வருகின்றனர். தன்னுடைய அடையாள அட்டையை காணவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு என போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை புதுப்பிக்கத் […]

Continue reading …

அரியலூர் சரணாலயத்திற்கு ராம்சார் சர்வதேச அங்கீகாரம்!

Comments Off on அரியலூர் சரணாலயத்திற்கு ராம்சார் சர்வதேச அங்கீகாரம்!

ராம்சார் சர்வதேச அங்கீகாரம் அரியலூர் மாவட்டத்திலுள்ள கரைவேட்டி பறவைகள் சரணாலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ராம்சார் அங்கீகாரம் தமிழ்நாட்டில் மேலும் 2 சதுப்பு நிலங்களுக்கு கிடைத்துள்ளது. அதன்படி, நீலகிரியிலுள்ள லாங்வுட் சோலை மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு ராம்சார் சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ராம்சார் உடன்படிக்கையின் கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களின் பட்டியலில் கரைவெட்டி சரணாலயம் உட்பட மேலும் 5 இந்திய இடங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மட்டும் ராம்சார் அங்கீகாரம் பெற்ற […]

Continue reading …

விராட் கோலி சகோதரரின் பதிவு!

Comments Off on விராட் கோலி சகோதரரின் பதிவு!

இந்திய வீரர் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகி உள்ளார். இத்தகவலை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோலி அதில் இடம்பெற்றிருந்தார். கோலி விலகியதற்குக் காரணம் அவரின் தாயார் சரோஜ் கோலியின் உடல்நலக் குறைவுதான் காரணம் என்று கூறப்படுகிறது. கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள அவர் தற்போது சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. […]

Continue reading …

சிஏஏ குறித்து முதலமைச்சர் உறுதி!

Comments Off on சிஏஏ குறித்து முதலமைச்சர் உறுதி!

சமீபத்தில், பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் ஒருவர் “மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சிகிகி நடைமுறைப்படுத்தப்படும்” என்று கூறியிருந்தார். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் சிஏஏ கால்வைக்க விடமாட்டோம்!’’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சிஏஏ நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர். இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான சிஏஏ சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் […]

Continue reading …