
ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினிகாந்த் திரைப்படத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மறைந்த பாடகர்களின் குரலில் பாட்டு குறித்த சர்ச்சைகளுக்கு பதிலளித்துள்ளார். “லால் சலாம்” திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்திலும் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். இப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். பிப்ரவரி 9ம் தேதிக்கு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட்டாகிவரும் நிலையில் இப்போது பாடல்கள் பற்றி ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அதில் ஒரு […]
Continue reading …
பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி கடந்த 2014ம் ஆண்டு முதலாக தொடர்ந்து இரண்டு முறை 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது. 2019ல் இரண்டாவது முறையாக பெரும்பான்மை ஆட்சி அமைத்த பாஜகவின் ஆட்சி காலம் மே மாதத்துடன் முடிவடைகிறது. நாடாளுமன்ற தேர்தலுகு முன்பாக நாளை மறுநாள் (பிப்ரவரி 1) நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்தாண்டின் முதல் மத்திய கூட்டத்தொடரான இதில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து […]
Continue reading …
செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாமீன் கேட்டு மனு அளித்துள்ளார். இன்று இந்த மனு விசாரணைக்கு வருகிறது. கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி கடந்த 7 மாதங்களாக தொடர்ந்து ஜாமீனுக்கு விண்ணப்பித்து வருகிறார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. முன்னதாக அவரது உடல்நலத்தை சுட்டிக்காட்டி […]
Continue reading …
முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான பிளிப்கார்டு மற்றும் ஸ்விகி ஊழியர்களை பணி அந்த நிறுவனங்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உலகம் முழுதும் அமேசான், மைக்ரோசாப்ட், டெஸ்லா, கூகுள் உள்ளிட்ட பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்ற ஊழியர்களை அந்நிறுவனங்கள் பணி நீக்கம் செய்து வருகிறது. இந்தியாவில் உள்ள முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி, தங்கள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்ற சுமார் 400 ஊழியர்களை பணி நீக்கம் […]
Continue reading …
பாஜக மக்களவை தேர்தலை ஒட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. வருகிற மக்களவை தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதேபோல் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜகவை வீழ்த்த […]
Continue reading …
இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிடும் மோகத்தால் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் மாட்டிக் கொள்ளாமல், சாக்லேட் திருடி சாப்பிடுவது எப்படி ? என வீடியோ எடுத்து, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலத்தில் உள்ள இனந்த மாநிலத்தைச் சேர்ந்த அனுமன் நாயக் என்ற இளைஞர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு ரீல்ஸ் வீடியோவை பதிவு செய்து அதைப் பதிவேற்றி வைரலாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, அங்குள்ள சூப்பர் மார்க்கெட் உரிமையாளரிடம் மாட்டிக் கொள்ளாமல், சாக்லேட் […]
Continue reading …
நைட்ரஜன் வாயுவை கொலை குற்றவாளிக்கு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவத்திற்காக அமெரிக்காவிற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவை சேர்ந்த சார்லஸ் சென்னட் என்பவர், தன் மனைவி எலிசபெத் பெயரில் உள்ள காப்பீட்டு தொகையை பெற, அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக கென்னத் யூஜின் ஸ்மித், ஜான் பார்க்கர் ஆகியோரை ஏற்பாடு செய்துள்ளார். இவர்கள் இருவரும் திட்டமிட்டபடியே எலிசபெத்தை அடித்து கொலை செய்தனர். மனைவி கொலை செய்யப்பட்ட சில மாதங்களிலெயே சார்லச் தற்கொலை செய்து […]
Continue reading …
நடிகர் சிம்பு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் சென்று மரியாதை செலுத்தினார். கடந்த மாதம் 28ம் தேதி தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் தேமுதிக தலைமை கழகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது நினைவிடத்தில் நாள்தோறும் மக்கள் சாரை சாரையாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் அரசியல் பிரமுகர்களும், திரைத்துறையினரும், விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தேமுதிக தலைமை கழகத்திற்கு சென்ற நடிகர் சிம்பு, விஜயகாந்த் […]
Continue reading …
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார். கடந்த 7 மற்றும் 8ம் தேதிகளில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 6 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம், 27 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்து நாள் சுற்றுப்பயணமாக இன்று வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று […]
Continue reading …
மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் கூட்டணி குறித்து பேச்சுவாரத்தை நடைபெற்று வருகிறது. எந்த கட்சி யாருடன் கூட்டணி? கூட்டணியில் எத்தனை இடங்கள் ஒதுக்கீடு? என்ற பரபரப்பில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறது. அதிமுகவுடன் பாஜக கூட்டணி விரிசல் ஏற்பட்டது. பாஜக தனது தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கி தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. அக்கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் இடம் பெறுவார்கள் என கூறப்படுகிறது. மேலும் பல கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. […]
Continue reading …