Home » Entries posted by Shankar U (Page 142)
Entries posted by Shankar

சானியா மிர்ஸாவின் முன்னாள் கணவர் மறுமணம்!

Comments Off on சானியா மிர்ஸாவின் முன்னாள் கணவர் மறுமணம்!

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் முன்னாள் கணவர் மறுமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து சானியா மிர்சா தனது சமூக வலைத்தளத்தில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் மற்றும் சானியா மிர்சாவின் ஆகிய இருவரும் 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது. சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “திருமணம் என்பது கடினமானது. விவாகரத்தும் கடினமானது. இதில் உங்களுக்கான […]

Continue reading …

செவ்வாய் கிரகத்தில் நீராதாரம்!

Comments Off on செவ்வாய் கிரகத்தில் நீராதாரம்!

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் செவ்வாய் கிரகத்தில் நீராதாரம் இருப்பதை உறுதி செய்துள்ளது. ஏற்கனவே செவ்வாய் கிரகத்தில் நீராதாரம் இருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தாலும், அவை தெளிவாக இல்லை. ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் “பிரிசெப்ட்” என்ற ரோவர், செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை உறுதி செய்துள்ளது. பிரிசெப்ட் ரோவர், செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசெரோஸ் என்ற பள்ளத்தாக்கில் ஆய்வு நடத்தி வருகிறது. அப்பள்ளத்தாக்கில், நீர் ஆதாரங்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பிரிசெப்ட் ரோவர், ஜெசெரோஸ் பள்ளத்தாக்கில் உள்ள மண்ணில் உள்ள […]

Continue reading …

அண்ணாமலையின் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!

Comments Off on அண்ணாமலையின் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!

சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை “நியூஸ் 18 தமிழ்நாடு” தொலைக்காட்சியில் நெறியாளர் கார்த்திகை செல்வன் நேர்காணல் நடத்தினார். பாஜக தலைவர் அண்ணாமலை இந்நிகழ்ச்சி தொடர்பாக நெறியாளர் கார்த்திகை செல்வனை பற்றியும் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் பற்றியும் கடுமையாக விமர்சித்தார். இதற்கு ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். செய்தியாளரின் கேள்விகளை கொச்சைப்படுத்தியதாக அண்ணாமலைக்கு நேற்று WJUT கடும் கண்டனம் தெரிவித்தது. இது குறித்து திமுக எம்பி கனிமொழி “அண்மையில் பாஜக தலைவர் அண்ணாமலை […]

Continue reading …

ஐரோப்பியாவில் இந்திய அரசுக்கு எதிராக தீர்மானம்!

Comments Off on ஐரோப்பியாவில் இந்திய அரசுக்கு எதிராக தீர்மானம்!

இந்திய அரசுக்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரித்து வரும் தேசியவாத பிரிவினை கொள்கைகள் பற்றி கவலை தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மணிப்பூர் உட்பட சமூக மோதல்களை தூண்டும் வகையில் இந்தியாவில் உள்ள தலைவர்கள் அறிக்கைகள் வெளியிடுவதை நிறுத்த வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமைகள், அடிப்பட சுதந்திரங்கள் கவலைக்குருய சூழ்ல் நிலையை கண்காணிக்க வேண்டிய அவசியமிருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றிய அமைப்பு தீர்மான […]

Continue reading …

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான விழா தொடக்கம்!

Comments Off on கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான விழா தொடக்கம்!

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடக்க விழாவில் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகள், கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ளார் பிரதமர் மோடி. விழாவின் தொடக்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை […]

Continue reading …

யோகிபாபுவை இயக்கும் ஹெச்.வினோத்!

Comments Off on யோகிபாபுவை இயக்கும் ஹெச்.வினோத்!

நகைச்சுவை மற்றும் கலந்த அரசியல் கலந்த திரைப்படம் ஒன்றை ஹெச். வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இயக்குனர் ஹெச்.வினோத் “சதுரங்க வேட்டை,” “தீரன் அதிகாரம் ஒன்று,” “நேர்கொண்ட பார்வை,” “வலிமை,” “துணிவு” ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கமல்ஹாசனின் 233வது படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. கமல், கல்கி, மணிரத்னத்துடன் இணைந்து “தக்லைஃப்” ஆகிய படங்களில் பிஸியாக இருப்பதால், கமல் 233 படம் தாமதமாகி வருகிறது. அதேபோல் “தீரன் அதிகாரம்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் தாமதமாகி வருவதால் ஹெச். […]

Continue reading …

திமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு.!

Comments Off on திமுக தேர்தல் பணிக்குழு அறிவிப்பு.!

திமுக தலைமைக் கழகம் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி திமுக சார்பில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அமைக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக பாஜக இடையே பிளவு ஏற்பட்டுள்ளதால், வருகின்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில் ஒரு புதிய கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

Continue reading …

உதயநிதிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து அண்ணாமலை விளக்கம்!

Comments Off on உதயநிதிக்கு பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து அண்ணாமலை விளக்கம்!

முன்னணி பத்திரிகை ஒன்றுக்கு சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்தார். இந்த பேட்டி குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர் சந்திப்பு என்றால் என்ன என்பதை பாஜகவினரை பார்த்து உதயநிதி தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், “அந்த பத்திரிகையாளர் சந்திப்பு 40 நிமிடம் நடந்ததாகவும் அதில் 38 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அனைத்து கேள்விகளும் நட்பு முறையில் கேட்கப்பட்ட கேள்வி. ஒரு கேள்வி கூட தமிழகத்தின் […]

Continue reading …

ஜெகநாதன் வழக்கை விசாரிக்க தடை: சென்னை உயர் நீதிமன்றம்!

Comments Off on ஜெகநாதன் வழக்கை விசாரிக்க தடை: சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை உயர்நீதிமன்றம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்நாதன் மீதான வழக்கை விசாரணை செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகன்நாதன் மீது சமீபத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை தடை செய்ய வேண்டும் என துணைவேந்தர் ஜெகன்நாதன் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு இன்று விசாரணைக்கு வந்த போது சேலம் பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கை விசாரிக்க தடை என வழக்கு விசாரணைக்கு […]

Continue reading …

புதுச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல்!

Comments Off on புதுச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல்!

வெளிமாநில மது பாட்டில்களை சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பேரில், சீர்காழி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் செல்வி, தலைமையில் தனிப்படை உதவி காவல் ஆய்வாளர் மணிகண்டகணேஷ், ராஜேந்திரன் மற்றும் போலீசார் திருமுல்லைவாசல் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை நடைபெற்று வருவதாக வந்த புகாரின் பேரில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது திருமுல்லைவாசல் அம்பேத்கர் நகர் […]

Continue reading …