
பல ஆண்டுகளாக திமுகவின் முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம், பஞ்சமி நிலம் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இக்குற்றச்சாட்டு குறித்து விளக்கமளிக்க வேண்டிய திமுகவோ, இதற்குப் பதில் கூறுவதைத் தவிர்த்து வருவது பொதுமக்களிடையே பலத்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றம் முரசொலி நிலம் தொடர்பான வழக்கில் பட்டியலினத்தோர் ஆணையம் புதிதாக நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை “திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி அலுவலகம் […]
Continue reading …
தற்காலிகமாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். சமீபத்தில் தமிழக அரசுடன் பழைய ஓய்வூதிய திட்டம், 15வது ஊதிய ஒப்பந்ததை இறுதி செய்வது உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டமிட்டபடி கடந்த ஜனவரி 9ம் தேதி முதல் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவித்தது. அதன்படி போராட்டம் தீவிரமடைந்துள்ளன. இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து தொழிலாளர்கள் விவகாரத்தில் உயர் நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை […]
Continue reading …
17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார் நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சனே. நீதிமன்றம் இவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு லமிச்சனே மீது 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்த வழக்கு நடந்து வந்தது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. லமிச்சனே நேபாளத்தின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். அவர் 2018ம் ஆண்டு […]
Continue reading …
நடிகை நயன்தாரா விழாவில் கலந்து கொண்டு பேசியபோது, “நாப்கின் பற்றி பொது வெளியில் பேசுகிறோம். இதுவே பெரிய மாற்றம்” என்று கூறியுள்ளார். சமீபத்தில் நடிகை நயன்தாரா பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த “ஜவான்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. சினிமாவில் நடிப்பதுடன் தொழிலதிபராக வலம் வரும் நயன்தாரா, கடந்தாண்டு Femi9 எனும் புதிய பிராண்ட் சானிட்டர் நாப்கினை அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த சானிடர் நாப்கினை மக்களிடம் கொண்டு சென்றவர்களை பாராட்டி நடைபெற்ற விழாவில் நயன்தாரா […]
Continue reading …
இயக்குனர் மணிரத்னம் மற்றும் கமலஹாசனின் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘தக் லைஃப்’. இத்திரைப்படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் புரமோஷன் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வைரலானது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. படத்தில் திரிஷா, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் நடித்து வருகின்றனர். இன்று இப்படத்தின் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கமலின் “தக்லைஃப்” படத்தில், ஜோஜூ ஜார்ஜ், மற்றும் கௌதம் கார்த்திக் […]
Continue reading …
நடிகை மாளவிகா மோகனன் “பட்டம் போல,” “பியாண்ட் த கிளவுட்ஸ்,” சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து “பேட்ட,” “மாறன்,” விஜயுடன் இணைந்து “மாஸ்டர்” உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள “தங்கலான்” படம் விரைவில் வெளியாகவுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி, சிவக்குமார், சிம்ரன் ரவாசுதீன் சித்திக், விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் “பேட்ட.” இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று […]
Continue reading …
“கங்குவா” திரைப்படம் சூர்யா நடிப்பில் “சிறுத்தை” சிவா இயக்கத்தில் உருவாகி வருகிறது. சூர்யாவின் 42வது படமான “கங்குவா” இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஷூட்டிங்கின்போது, நடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டது. சிகிச்சை பெற்று வந்த அவர், ஓய்வெடுக்க வெளி நாடு சென்றிருந்தவர், புத்தாண்டு முடிந்து சென்னை திரும்பினார். சமீபத்தில் கலைஞர் 100 நிகழ்ச்சியில் பங்கேற்று கலைஞர் பற்றி பேசினார். “கங்குவா” படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், […]
Continue reading …
நடிகர் விஜய் தற்போது வெங்கட்பிரபுவின் G.O.A.T திரைப்படத்தின் ஷீட்டிங்கின்போது தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது The Greatest Of All Time திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஷூட்டிங் சென்னை […]
Continue reading …
அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டாம், இந்த ஒரு கோரிக்கையை மட்டும் நிறைவேற்றுங்கள், வேலைக்கு வருகிறோம் என தெரிவித்துள்ளார். அண்ணா போக்குவரத்து தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் இதுகுறித்து கூறும்போது, “அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டாம், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு மட்டும் இந்த மாதத்திற்கான நிலுவைத் தொகையை மட்டும் வழங்கினால் போதும். தற்போதைக்கு பணியில் உள்ள பணியாளர்களுக்கு 18 மாதம் DA வர வேண்டி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் பொங்கல் […]
Continue reading …
மாலத்தீவில் உள்ள அமைச்சர்கள் பிரதமர் மோடியின் லட்சத்தீவு விசிட் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளனர். இதனால் மாலத்தீவு அமைச்சர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது மாலத்தீவு அதிபருக்கே எதிர்ப்பு வலுத்து வருவதையடுத்து அவருடைய பதவிக்கு ஆபத்து என்று கூறப்பட்டு வருகிறது. மாலத்தீவு அதிபராக முய்சு பதவி ஏற்றதிலிருந்து அவர் இந்தியாவுக்கு எதிரான சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும் அவர் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கள் குறித்து அந்நாட்டின் முன்னாள் அமைச்சர்கள், சபாநாயகர் […]
Continue reading …