
நடிகை அமலா பால் “சிந்து சமவெளி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். இவர் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். இவர் “மைனா” படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவரானார். இடையில் அவர் திருமணம் செய்துகொண்டு குறுகிய காலத்திலேயே விவாகரத்தும் செய்தார். தொடர்ச்சியாக துணிச்சலான மற்றும் சர்ச்சையானக் கதாபாத்திரங்களாகவே தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனால் இப்போது முன்புபோல […]
Continue reading …
“ராக்கி” மற்றும் “சாணி காகிதம்” ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்து தனது மூன்றாவது படமான “கேப்டன் மில்லர்” படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இப்போது படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி ரிலீசாகவுள்ளது. நேற்று இத்திரைப்படத்தின் […]
Continue reading …
அங்கன்வாடி ஒன்றில் திடீரென மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரு சிறுமி, அங்கன்வாடி பணியாளர் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்துள்ளனர். மதுரை முத்துப்பட்டியில், அங்கன்வாடி மையத்தில் மொத்தம் 23 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இன்று 13 குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு வந்திருந்தனர். இன்று காலை திடீரென அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், ஒரு குழந்தைகள் மற்றும் 47வயது மதிக்கதக்க ஒரு அங்கன்வாடி பணியாளர் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக தனியார் மருத்துவமனைக்கு […]
Continue reading …
எண்ணெய் டேங்கர் லாரியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் விளக்கமளித்துள்ளனர். லாரியின் டயர் வெடித்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் டிவைடரில் மோதி, பக்கவாட்டில் கவிழ்ந்து தீப்பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கன்னாவில் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை ஏற்பட்ட விபத்தில் எண்ணெய் டேங்கர் லாரி தீப்பிடித்தது. இவ்விபத்தில் டேங்கர் லாரி முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. ஆனால் லாரியின் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் எவ்வித காயமும் […]
Continue reading …
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, திமுகவுக்கு கெடுவிதித்துள்ளார். இதுகுறித்து அவர் “தாம்பரத்தில் அமைதியான முறையில் போராடிய மக்கள் மீது காவல்துறை அராஜகம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தாம்பரம் சென்னை கிறிஸ்தவ கல்லூரி நடத்தும் சமூகக் கல்லூரியை மேயர் மற்றும் துணை மேயரின் ஒப்புதல் இல்லாமல் அத்துமீறி சீல் வைத்துடன் இது குறித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய மனிதநேய மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் எம் யாக்கூபை ஒருமையில் திட்டிய மாநகராட்சி ஆணையாளர் அழகு […]
Continue reading …
டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் நாடாளுமன்றத் தேர்தலின் போது எனது பிரச்சாரத்தை தடுக்கவே கைது நடவடிக்கை எடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அமலாக்கத்துறை டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கெஜ்ரிவால் கூறும்போது, “பாஜக என்னை கைது செய்ய விரும்புவது நேர்மையை கைது செய்ய விரும்புவதற்கு சமம், எனது மிகப்பெரிய சொத்து நேர்மை தான். அதை அவர்கள் கெடுக்க விரும்புகிறார்கள், எனக்கு அனுப்பப்பட்ட சம்மன்கள் சட்டவிரோதமானவை என […]
Continue reading …
வியாபாரி ஒருவர் சில நாட்களுக்கு முன் சென்னையில் மரணமடைந்த வழக்கு குறித்த விசாரணையில் அது விபத்து அல்ல கொலை என்று தெரிய வந்துள்ளது. சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த 37 வயதான பிரேம்குமார் பழைய இரும்பு மற்றும் பேப்பர் கடை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி சன்பிரியா. நேற்று முன் தினம் இரவு கடையை பூட்டிவிட்டு பிரேம்குமார் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். போலீசார் வழக்குப்பதிவு […]
Continue reading …
ஜனவரி 19ம் தேதி மறைந்த கேப்டன் விஜயகாந்த்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தப்படும் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 28ம் தேதி நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த 29ம் தேதி அவரது உடல் அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர்கள் சிவகுமார், கார்த்தி தயாரிப்பாளர் […]
Continue reading …
காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஒ.எஸ்.ஆர் ஷர்மிளா காங்கிரஸ் கட்சிதான் இந்தியாவின் மிகப்பெரிய மதசார்பற்ற கட்சி என தெரிவித்துள்ளார். இன்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒ.எஸ்.ஆர் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம், “காங்கிரஸ் கட்சி தான் நாட்டின் மிகப்பெரிய மதசார்பற்ற கட்சி என்றும் இந்தியாவின் உண்மையான கலாச்சாரத்தை நிலை நிறுத்தி நமது தேசத்தின் அடித்தளத்தை எழுப்புகிறது. முன்னதாக ஒ.எஸ்.ஆர் ஷர்மிளா காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூர்னே கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் […]
Continue reading …
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிற கட்சிகளின் ஐடி விங் போல வெறுப்பை உண்டாக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாடு முழுதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமான பணியாற்றி வருகின்றன. தமிழகத்தில் உள்ள முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக சமீபத்தில், பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. எனவே அக்கட்சி யாருடன் கூட்டணி அமைக்கவுள்ளது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆளுங்கட்சியான திமுக மீது பல விமர்சனங்களை அதிமுக முன்வைத்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து, […]
Continue reading …