
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணநிதி தமிழ் சினிமாவில் “பராசக்தி” உள்ளிட்ட பல ஹிட் படங்களுக்கு புரட்சிகரமான வசனங்களையும், பாடல்கள், திரைக்கதை உள்ளிட்ட பன்முகக் கலைஞராக பணியாற்றியவர். அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கடந்தாண்டு டிசம்பர் 24ம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. இவ்விழாவிற்கு வந்து சிறப்பிக்குமாறு ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் கலைஞர்களுக்கு அழைப்பிதல் வழங்கப்பட்டது. தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு […]
Continue reading …
அஸர்பைஜானில் அஜீத்தின் 62வது படமான “விடாமுயற்சி” திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. இத்திரைப்படத்தில், அஜீத்துடன் திரிஷா, அர்ஜூன் ஆகியோர் நடித்து வருகின்றனர். திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் கடந்த மாதம்தான் தொடங்கி நடந்து வந்தது. ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும், 2வது கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தை அடுத்து, அஜீத், “மார்க் ஆண்டனி” ஹிட் படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் […]
Continue reading …
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி 60க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஜப்பானில் தற்போது தீவிரமாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஜப்பானின் நிலநடுக்கம் குறித்த அதிர்ச்சி மக்கள் மத்தியில் நீங்கும் முன்னரே ஆப்கானிஸ்தானில் இன்று அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் என்ற பகுதியில் […]
Continue reading …
அலுமினிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று மழைநீர் வடிகால் வழியாக கழிவு நீரை வெளியேற்றியதை மக்களே கண்டுபிடித்து புகாரளித்துள்ளனர். மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அலுமினிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையிலுள்ளது. அந்நிறுவனத்தின் கழிவு நீரை மழை நீர் வடிகால் வழியாக வெளியேற்றியதாக புகார் எழுந்தது. இப்புகாரை அடுத்து மக்களை அதை கண்டுபிடித்து தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்தனர். மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இது குறித்து […]
Continue reading …
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் இன்னும் ஒரு சில மாதத்தில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். இதுகுறித்து ஓ.பி.எஸ். பேட்டியில், “அமமுகவுடன் எங்கள் அமைப்பு இணைந்து பணியாற்றும் சூழல் உள்ளது. பிரதமரிடம் நேற்று சந்தித்தபோது அவரிடம் அரசியல் பேசவில்லை. மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பாஜகவுடன் இணைந்து பணியாற்ற நல்ல சூழல் அமைந்துள்ளது. இபிஎஸ் குறித்த ரகசியத்தை நான் வெளியே சொல்ல முடியாது. அது தெரிய […]
Continue reading …
சமூக வலைதளங்களில் பிரபல நடிகை ரம்பா தான் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் கூறிய சம்பவங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் 90களில் மிகவும் பிரபலமானவர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்தவர், தற்போது திருமணமாகி குழந்தைகளோடு செட்டில் ஆகிவிட்டார். சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டிக் கொடுத்த ரம்பா, தான் அருணாச்சலம் படத்தில் ரஜினியோடு நடித்த அனுபவங்களை பகிர்ந்திருந்தார். அருணாச்சலம் படத்தில் ஒரு […]
Continue reading …
டிஐஜி போலீஸ் சீருடையில் பாஜகவில் இணைந்த இரண்டு காவலர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வெளிப்பாளையம் என்ற காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் போலீஸ் சீருடையில் பாஜகவில் இணைந்ததாக தெரிகிறது. கடந்த 27ம் தேதி நடந்த இச்சம்பவம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலான சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவலர்கள் இருவரும் ஆயுத படைக்கு மாற்றப்பட்டனர். சம்பந்தப்பட்ட இருவரையும் டிஐஜி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு […]
Continue reading …
சமீபத்தில் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் நடைபெற்றது. தற்போது சமீபத்தில் புதுவையிலும் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் நடைபெற்றது. கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “புதுச்சேரியில் ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது வேறு மாதிரி சென்று கொண்டிருக்கிறது. ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். கொண்டாட்டம் எல்லாவற்றைக்கும் ஒரு வரைமுறை இருக்க வேண்டும். பாதுகாப்பு […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மனைவி சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையும், 50 லட்சம் அபதாரமும் விதித்து சென்னை உயர்நீதி மன்றம் கடந்த டிசம்பர் 21ம் தேதி உத்தரவிட்டிருந்தது. மேலும் மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு கால அவகாசமும் அளிக்கப்பட்டது. இதுதீர்ப்பினை அடுத்து அமைச்சர் மற்றும் சட்டமன்ற […]
Continue reading …
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் “இந்தியன் 2” படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீசாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து பார்த்ததில் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவை படக்குழுவினர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் மேலும் சில காட்சிகளை […]
Continue reading …