
“விடாமுயற்சி” திரைப்படத்தில் அஜீத் கவனம் செலுத்தி வருகிறார். இத்திரைப்படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் நடந்து வருகிறது. படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் ஷூட்டிங் இப்போதுதான் அஜர்பைஜானில் தொடங்கியுள்ளது. அஜீத் நடிக்கும் அடுத்த படத்தை இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் அவர் இயக்கிய “மார்க் ஆண்டனி” திரைப்படம் வெற்றிபெற்று 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. […]
Continue reading …
ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் யோகி பாபு நடிப்பில் ‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போது ரிலீசுக்காக காத்துள்ளது. பல கட்ட தாமதங்களுக்கு பிறகு இப்போது ஒருவழியாக பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் ‘அயலா அயலா’ என்ற பாடல் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் பிரம்மாண்டமாக […]
Continue reading …
தேமுதிக கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் சில வாரங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின்பு சில நாட்களில் மீண்டும் வீடு திரும்பினார். அதன் பின்னர் நடந்த கட்சி செயற்குழு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். கலந்து கொண்டாலும், அவர் அந்நிகழ்ச்சியில் எதுவும் பேசவில்லை. மேலும் சுயநினைவின்றியே அவர் இருப்பது போலவே அந்த நிகழ்ச்சி முழுவதும் பிறர் உதவியோடு அமர்ந்திருந்தார். இதைப் பார்த்த பலரும் தேமுதிகவினர் அரசியல் லாபத்துக்காக விஜயகாந்தை வதைப்பதாகக் குற்றம் சாட்டினர். […]
Continue reading …
நடிகர் தனுஷ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகும் இப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தின் ஷூட்டிங்கை முடித்த தனுஷ் அடுத்து தன்னுடைய 50வது படத்தில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இப்போது படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் […]
Continue reading …
கிருத்திகா உதயநிதி ஜெயம் ரவி நடிக்கும் 33வது திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இத்திரைப்படத்துக்கு பழைய ஹிட் படத்தின் டைட்டிலான ‘காதலிக்க நேரமில்லை’ என்ற தலைப்பை வைத்துள்ளனர். ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன், யோகி பாபு, மனோ, லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் கொக்கன், வினோதினி உட்பட பலரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் மொத்தமாக நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் […]
Continue reading …
இரண்டு ரவுடிகளை போலீசார் காஞ்சிபுரத்தில் என்கவுண்டர் செய்து சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பல்வேறு கொலை வழக்குகளில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடிகள் ரகு மற்றும் ஹசன் ஆகிய இருவரும் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் தேடி வந்தனர். காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு பகுதியில் இருவரும் பதுங்கி இருப்பதாக நேற்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது ரவுடிகள் போலீசார் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தியதாகவும் […]
Continue reading …
மர்ம நபர்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கியின் சக்திக்கு காந்ததாஸ் ஆகியோர் ராஜினாமா செய்யாவிட்டால் குண்டு வைப்போம் என மிரட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு வந்த ஈமெயிலில், “ரிசர்வ் வங்கியின் தலைவர் சக்தி காந்ததாஸ், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையேல் மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி உள்ளிட்ட 11 இடங்களில் வெடிகுண்டு வைப்போம். சக்தி காந்ததாஸ், நிர்மலா சீதாராமன் […]
Continue reading …
மாசு கட்டுப்பாட்டு வாரியம் சென்னை எண்ணூர் தொழிற்சாலையிலிருந்து கசிந்தது அமோனியா வாயு தான் என உறுதி செய்துள்ளது. சென்னை எண்ணூர் கடல் பகுதியில் அமைந்துள்ள கோரமண்டல் தொழிற்சாலையின் திரவ அமோனியா எடுத்துவரும் குழாயிலிருந்து அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்துள்ளது. ஆலை வாசலில் காற்றில் 400 மைக்ரோ கிராமாக இருக்க வேண்டிய அமோனியா அளவு தற்போது 2090 மைக்ரோ கிராம் இருப்பதாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் கடலில் 5 மில்லிகிராமாக […]
Continue reading …
தற்போது மீண்டும் இந்தியாவில் கொரானா வைரஸ் நோயின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதித்த 3 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதித்தவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 412 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது. நாடு முழுதும் தற்போது 454 பேர் கொரோனாவால் […]
Continue reading …
நாளை காங்கிரஸ் கட்சி வருகிற 2024ம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 2024ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற உள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகளில் அரசியல் கட்சிகள் இப்போதே தொடங்க ஆரம்பித்துள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்து வருகிறது. மத்தியில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்பட்ட சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில […]
Continue reading …