Home » Entries posted by Shankar U (Page 161)
Entries posted by Shankar

அரசு பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, வயிற்று வலி!

Comments Off on அரசு பள்ளி மாணவர்களுக்கு வாந்தி, வயிற்று வலி!

அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. இன்று காலை திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமயங்குடி அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தில் சிற்றுண்டி அருந்தியுள்ளனர். உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் 19 மாணவ மாணவிகளுக்கு திடீர் வாந்தி மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் ஆசிரியர்களும் பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்தனர். பாதிக்கப்பட்ட 19 மாணவர்களை உடனடியாக மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் […]

Continue reading …

கணவன் கண் முன்னே மனைவி பலி!

Comments Off on கணவன் கண் முன்னே மனைவி பலி!

கணவன் கண் முன்னே இருசக்கர வாகனத்தில் சென்றபோது கிரைன் மீது மோதியதில் சக்கரத்தில் சிக்கி மனைவி பரிதாபமாக பலியானார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகிலுள்ள ஆவுடைபொய்கை அருகே கேரளா வைத்தியசாலை ஒன்றில் பெட்டிக்கடை வைத்துள்ள நாச்சியப்பன் என்பவரின் மனைவி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அஞ்சலகத்தில் பணிபுரிந்து வரும் வளர்மதிக்கு சிகிச்சை பார்த்து வருகின்றனர். காரைக்குடி பகுதியில் லேசான மழை பெய்து வரும் பொழுது கணவன் நாச்சியப்பன் உடன் வளர்மதி இருசக்கர வாகனத்தில் வரும் பொழுது மழை பெய்ததால் […]

Continue reading …

பொன்முடி தொகுதியில் இடைத்தேர்தலா?

Comments Off on பொன்முடி தொகுதியில் இடைத்தேர்தலா?

அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டதால், அவரது எம்எல்ஏ பதவி பறிபோனது. இதனால் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி இப்போது காலியாக உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஒரு எம்எல்ஏ அல்லது எம்பி ஆக இருப்பவர் பதவி இழந்தால் அந்த தொகுதிக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும். மேல்முறையீடு செல்வதாக கூறி, மேல்முறையீடு நிலுவையில் உள்ளது உள்ளிட்ட காரணங்களை கூறி தேர்தலை தள்ளிப் போடக்கூடாது என ஏற்கனவே […]

Continue reading …

முதலமைச்சர் தூத்துக்குடியில் ஆய்வு!

Comments Off on முதலமைச்சர் தூத்துக்குடியில் ஆய்வு!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் ஆய்வு செய்து வருகிறார். அந்தோணியார்புரம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்தார். அதன்பின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை பார்வையிடுகிறார். பின்னர் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட நான்கு […]

Continue reading …

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பா?

Comments Off on அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பா?

உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக இருவருக்குமான தண்டனை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிறை தண்டனை பெற்றதால் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவியை பொன்முடி இழந்தார். பொன்முடி வகித்து […]

Continue reading …

ஸ்ரீரங்கத்தில் ரயில்கள் நின்று செல்லும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Comments Off on ஸ்ரீரங்கத்தில் ரயில்கள் நின்று செல்லும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஸ்ரீரங்கம் வழியாக செல்லும் சில ரயில்கள் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நின்று செல்லும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசியில் பெருமாள் கோவில்களில் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் சிறப்பு வாய்ந்தது. புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலில் நாளை மறுநாள் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சொர்க்கவாசல் திறப்பை தரிசிக்க வருவது வழக்கம். இதனால் திருச்சி பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு சிறப்பு பேருந்துகள் […]

Continue reading …

அரசுக்கு புகழாரம் சூட்டும் நடிகர் வடிவேலு!

Comments Off on அரசுக்கு புகழாரம் சூட்டும் நடிகர் வடிவேலு!

நடிகர் வடிவேலு “திட்டுபவர் திட்டட்டும் அரசு தன் கடமையை சிறப்பாக செய்கிறது” புகழாரம் சூட்டுகிறார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் பசுமை சைதை திட்டத்தின் கீழ் மிக்ஜாம் புயலின் தாக்கத்தினால் வீழ்ந்த மரங்களை ஈடு செய்யும் வகையில் சைதாப்பேட்டை தொகுயில் 5000 மரங்களை நடும் நிகழ்வு சைதாப்பேட்டை தாடண்டர் நகரிலுள்ள மைதானத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக நடிகர் வடிவேலு கலந்து கொண்டு மரத்தினை நட்டு துவக்கி வைத்து பேசியபோது, “தமிழ்நாடு அரசு பல சோதனைகளை சந்திக்கிறது எனவும் சென்னையில் […]

Continue reading …

டொனால்டு டிரம்ப் குறித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

Comments Off on டொனால்டு டிரம்ப் குறித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட தகுதியற்றவர் என்று கொலராடோ மாகாண நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்துள்ளது. டொனால்டு டிரம்ப் 2021-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தார். தேர்தல் தோல்வியை அவர் ஏற்க மறுத்த நிலையில், டிரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகைக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் டிரம்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலில் […]

Continue reading …

பாஜக வேட்பாளராக களமிறங்கும் முன்னணி நடிகை

Comments Off on பாஜக வேட்பாளராக களமிறங்கும் முன்னணி நடிகை

நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட் சினிமாவின் முன்னணியில் உள்ளவர். இவர் “பேஷன்,” “குயின்,” “தனு வெட்ஸ் மனு ரிட்டன்ஸ்,” “ஜான்சி ராணி,” தமிழில் “தலைவி” உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். “சந்திரமுகி 2” திரைப்படத்தில் சமீபத்தில் ராகவா லாரன்ஸுடன் இணைந்து நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து மாதவனுடன் அவர் இணைந்து நடிக்கும் புதிய படம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. சமீப காலமாகவே பல சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வரும் நடிகை கங்கனா ரனாவத், பாஜகவுக்கு ஆதரவாளராக இருந்து வருவதாகவும் […]

Continue reading …

பொன்முடி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா?

Comments Off on பொன்முடி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா?

அமைச்சர் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தண்டனை குறித்த விவரங்கள் நாளை வெளியாக உள்ள நிலையில் அமைச்சர் பதவியை பொன்முடி ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளன. திமுக ஆட்சியில் கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவி மீதும் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்த […]

Continue reading …