
பாரதி குறும்படம் இளம் தலைமுறையினர் கவிஞர் பாரதியார் குறித்து அறிந்து கொள்ளும் விதமாக வெளியிடப்பட்டது. கோவையில் பாரதியார் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது வாழ்வியல்கள் மற்றும் தமிழ் கவிதைகள் குறித்து இன்றைய இளம் தலைமுறை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ளும் விதமாக, ‘பாரதி’ எனும் பெயரில் குறும்படம் வெளியிடப்பட்டது. அரை மணி நேரம் ஓடக்கூடிய இந்த குறும்படத்தை அவிநாசி அரசு கலைக் கல்லூரியைச் சேர்ந்த தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் போ.மணிவண்ணன் எழுதி, நடித்து, இயக்கியுள்ளார். […]
Continue reading …
காங்கிரஸ் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஐந்து மாநில தேர்தல் சமீபத்தில் நடந்தது. அத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததற்கு உதயநிதி சனாதனம் குறித்து பேசியதே காரணம் என்று காங்கிரஸ் நினைக்கிறது. அதேபோல் திமுக எம்பி செந்தில்குமார் பேசிய சர்ச்சைக்குரிய கருத்தும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே திமுகவுடன் கூட்டணி அமைத்தால் அகில இந்திய அளவில் காங்கிரஸுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்து […]
Continue reading …
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று காலை காவலர்களுக்கும் பக்தர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு குறித்து கோவில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இன்று முதல் ஸ்ரீரங்கத்தில் உள்ள ரெங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக ஏராளமான பக்தர்கள் ரங்கநாதர் கோவிலுக்கு வருகை தந்து வருகின்றனர். இன்று அமாவாசை என்பதால் அதிகாலை முதலே கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். சபரிமலை யாத்திரை சென்று வரும் ஐயப்ப பக்தர்கள் வரும் வழியில் உள்ள சிறப்பு மிக்க கோவில்களுக்கு சென்று […]
Continue reading …
மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் சென்னையை போன்று மதுரையை மாற்றி விடாதீர்கள் என கண்டனம் தெரிவித்துள்ளனர். மதுரை ஐகோர்ட் கிளை, “சட்ட விரோதமாக கட்டுமானம் கட்டுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத கட்டுமானம் தொடர்பாக, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியற்ற கட்டடங்களை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கலாம், ஆனால் நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது, முறையற்ற கட்டிடங்களால் சென்னை போன்று மதுரையையும் மாற்றி விடக்கூடாது. அனுமதி ஏற்ற கட்டிடங்களால் மக்கள் நிம்மதியற்ற வாழ்க்கை வாழ நேரிடுகிறது. மதுரை […]
Continue reading …
மத்திய குழு வெள்ள பாதிப்பு குறித்து விரைவில் அறிக்கை அனுப்பப்படும் என தமிழகத்திற்கு தெரிவித்துள்ளது. மத்திய குழு சமீபத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கடும் சேதம் குறித்து கணக்கிட சென்னைக்கு வருகை தந்தது. பின்னர் செய்தியாளர்களிடம், “2015ம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை சிறப்பான முறையில் செய்துள்ளது. மாநில அரசு எடுக்கும் முயற்சியில் நாங்கள் மிகவும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து நன்றாக அறிந்திருக்கிறோம். பாதிப்புகளிலிருந்து மக்கள் மீள […]
Continue reading …
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “கங்குவா.” சூர்யாவின் 42வது படமான “கங்குவா” திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் ஷூட்டிங்கின்போது, நடிகர் சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டது. சிகிச்சை பெற்று வந்த அவர், ஓய்வெடுக்க மும்பை சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே இப்படத்தின் அடுத்த கட்ட பணிகள் நடந்து வருகிறது. எனவே இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 11ம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஞானவேல் […]
Continue reading …
மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73வது பிறந்த நாளான இன்று நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் சமீபத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த கனமழையால், சென்னையில் உள்ள பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு அரசுடன் இணைந்து, தன்னார்வலர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் உதவி செய்து […]
Continue reading …
ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் “தலைவர் 170.” கடந்த சில மாதங்களாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படத்தின் டைட்டில் டீசர் வீடியோ இன்று வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்திற்கு “வேட்டையன்” என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. “சந்திரமுகி” திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டராக “வேட்டையன்” என்ற கேரக்டரை ஏற்று நடித்த ரஜினிகாந்த் இப்படத்தில் முழுவதுமாக அந்த கேரக்டரை ஏற்று நடித்துள்ளார். ரஜினியுடன் அமிதாப்பச்சன் நடித்துள்ள […]
Continue reading …
நடிகர் ஆர்.கே.சுரேஷ் தனக்கும் ஆருத்ரா மோசடிக்கும் எவ்விதமான தொடர்புமில்லை என்று தெரிவித்துள்ளார். நடிகர் ஆர்.கே.சுரேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆருத்ரா மோசடி வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது, திடீரென ஆர்.கே.சுரேஷ் துபாய்க்கு சென்று விட்டார். அவர் சமீபத்தில் சென்னை திரும்பியவர் பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டபோது அவர் “தனக்கும் ஆருத்ரா மோசடிக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சில […]
Continue reading …
17% ஊதிய உயர்வு பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு வழங்க இந்திய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்நிலையில் வாரத்திற்கு இனி 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற தகவல் வெளியாகி உள்ளது. f ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழே இந்தியாவில் உள்ள அனைத்துப் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் இயங்கி வருகிறது. சமீபத்தில் பொதுத்துறை வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அதன்படி, பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க இந்திய கூட்டமைப்பு […]
Continue reading …