
கடந்த சில ஆண்டுகள் ஷாருக் கானுக்கு மோசமான அமைந்தன. அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது அவர் இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார். 2023ம் ஆண்டில் அவர் நடிப்பில் ரிலீஸ் ஆன “பதான்” மற்றும் “ஜவான்” ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஹிட்டடித்து 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்தன. அவர் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் “டன்கி” திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை […]
Continue reading …
1976ம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான அவர் இளையராஜா. இதுவரை 1400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்திய அளவில் ஏன் உலக அளவிலேயே அதிகபடங்களுக்கு இசையமைத்தவராக சாதனை படைத்துள்ள இளையராஜாவின் பயோபிக் தற்போது உருவாக உள்ளது. இந்த படத்தை பாலிவுட் இயக்குனர் பால்கி இயக்க உள்ளதாகவும், அந்த படத்தில் இளையராஜா வேடத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்துக்கு இசையமைப்பாளராக பணியாற்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. […]
Continue reading …
கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய பழங்குடியினர் இளைஞர் விழாவில் கலந்து கொண்டபோது தமிழ்நாட்டின் பெருமை குறித்து பிற மாநில பழங்குடி மக்களிடையே பேசியுள்ளார். சென்னையில் அடையாரில் உள்ள இளையோர் விடுதியில் நேரு யுவகேந்திராவின் 15வது தேசிய பழங்குடியினர் இளைஞர் விழா தொடங்கி நடந்து வருகிறது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக ஜார்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா என பல மாநிலங்களை சேர்ந்த பழங்குடி மக்கள் வருகை புரிந்துள்ளனர். விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். அப்போது […]
Continue reading …
“துருவ நட்சத்திரம்” கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவான திரைப்படம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட “துருவ நட்சத்திரம்” படம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. அந்த படம் இப்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தை முடித்தது குறித்து இயக்குனர் கௌதம் மேனன், “போதிய பணம் இல்லாததால் இந்த படத்தை முடிக்க முடியாத சூழல் நிலவியது. அதனால் அப்போது படங்களில் நடிக்க தொடங்கினேன். அதன் மூலம் வந்த பணத்தைக் கொண்டுதான் இந்த […]
Continue reading …
ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் அடுத்து தனது மூன்றாவது படமான “கேப்டன் மில்லர்” திரைப்படத்தை தனுஷை வைத்து இயக்குகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். “கேப்டன் மில்லர்” திரைப்படம் தனுஷின் சினிமா வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ரஜினிகாந்தின் […]
Continue reading …
வானிலை ஆய்வு மையம் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றின் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுதும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே ஒரு சில மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழை […]
Continue reading …
உத்தரகாண்ட்டில் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று காலை 8 மணிக்குள் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட உள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. உத்தரகாண்ட் சுரங்கத்தில் 800 மிமீ ராட்சத குழாய் சுரங்கத்தில் 44 மீட்டர் தொலைவுக்கு செலுத்தப்பட்டுள்ளது, இன்னும் 12 மீட்டர் தூரம் மட்டுமே குழாய் செலுத்தப்பட்ட பிறகு தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட உள்ளனர், தொழிலாளர்களுக்கு குழாய் மூலம் உணவு, ஆக்சிஜன் தொடர்ந்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றும் […]
Continue reading …
அமைச்சர் மா சுப்பிரமணியன் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் மார்பு சளி மற்றும் இடைவிடாத இருமல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஐந்தாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், “விஜயகாந்த் உடல் உபாதைகள் காரணமாக அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தற்போது படிப்படியாக தேறி வருகிறது. இருப்பினும் […]
Continue reading …
சீனு ராமசாமி விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய “தர்மதுரை” திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதன் பின் சீனு ராமசாமி விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான “மாமனிதன்” திரைப்படம் கடந்தாண்டு ரிலீசானது. ஆனால் திரையரங்கில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இப்போது சீனு ராமசாமி “இடிமுழக்கம்” மற்றும் “கோழிப்பண்னை ராமசாமி” ஆகிய படங்களை இயக்கி வருகிறார். சீனு ராமசாமி பிரபல நடிகை மனிஷா யாதவ்வுக்கு படப்பிடிப்பு தளத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக […]
Continue reading …
பிஎஸ்எப் வீரர்கள் பாகிஸ்தானிலிருந்து வந்த டிரோனை கைப்பற்றியது. அதில் கிலோ கணக்கில் ஹெராயின் இருந்ததை கண்டுபிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் அவ்வப்போது பாகிஸ்தானிலிருந்து டிரோன் மூலம் ஹெராயின் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. நேற்று பாகிஸ்தான் டிரோன் மூலம் ஹெராயின் கடத்த முயன்றதை எல்லை பாதுகாப்பு படைவினர் முறியடித்தனர். நேற்று பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்திய பகுதிக்குள் நுழைந்த டிரோன் ஒன்றை இடைமறித்து சுட்டுத் தள்ளிய வீரர்கள் அதில் 565 […]
Continue reading …