
கிரவுன் பிளாசா என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல் சென்னை அடையாறு பகுதியில் உள்ளது. இது தற்போது மூடப்பட உள்ளதாகவும், இதில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கிரவுன் பிளாசா ஹோட்டல் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல். கடந்த 2015ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு நாள் தங்குவதற்கு ரூபாய் 10,000 முதல் 17,000 வரை வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த ஹோட்டல் டிசம்பர் 20 […]
Continue reading …
அமைச்சர் செந்தில் பாலாஜி பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே 10 முறை அவரது காவல் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 11வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரை டிசம்பர் நான்காம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி மருத்துவ சிகிச்சைகளுக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் […]
Continue reading …
நடிகர் மன்சூர் அலிகான் திரிஷா பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக் கூறிய விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை காவல்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நடிகர் மன்சூர் அலிகான் பேசியது தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு நடிகை திரிஷா, லோகேஷ் கனகராஜ், குஷ்பு, தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தது. நடிகர் மன்சூர் அலிகான் ஆபாச பேச்சு விவகாரத்தில் நடிகை திரிஷா புகார் குறித்து மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் நேற்று […]
Continue reading …
சமீபத்தில் சென்னை கொத்தவால்வாசடியில், கோயிலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் முரளிகிருஷ்ணன் கைதானார். அவர் தற்போது பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் போலீசாரிடம், “மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தினமும் மதுவுக்கு அடிமையகி தினமும் குடித்து வந்ததாகவும், அடிக்கடி தனது காதில் நீ உயிருடன் இருக்காதே என்று ஒரு குரல் கேட்டுக் கொண்டிருந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் ‘வீட்டின் மேலே இருந்து குதித்து விடு தற்கொலை செய்துகொள் எப்படியாவதும் இறந்துவிடு’ என ஒரு குரல் […]
Continue reading …
விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் மட்டுமல்ல சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான் என கூறியிருந்தார். “திமுக மேடையில் பேசுவது ஒன்று… செயல்பாட்டில் வேறொன்று” என்று பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து வானிதி சீனிவாசன், “தமிழ்நாட்டில் மட்டுமல்ல சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருந்தார். மேலும், சாதியை ஒழிக்கத்தான் திமுக போராடி வருவதாகவும் கூறினார். ஆனால் நடப்பதோ வேறு…. விழுப்புரம் மாவட்டம் […]
Continue reading …
இன்று காலை திருவனந்தரபுரத்திலிருந்து சென்னை விரைவு ரயில் நெமிலிச்சேரி அருகே வரும்போது பி1 பெட்டியில் புகை வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சமீபத்தில் இந்தியாவில் ஓடிஷா ரயில் கோர விபத்தில் 300க்கும் அதிகமானோர் பலியாகினர். இதையடுத்து, ஆன்மிக சுற்றுலா ரயிலில் வந்த ரயிலில் சிலிண்டர் வைத்து சமைத்ததால் பெரும் விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, ரயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து சென்னை விரைவு ரயில் இன்று காலை நெமிலிச்சேரி அருகே வரும்போது, பி1 பெட்டியின் பிரேக் பகுதியில் […]
Continue reading …
சமீபத்தில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியதால் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மிதிலை என்ற புயலாக மாறி வங்கதேசத்தில் கரையை கடந்தது. தற்போது வங்கக்கடலில் வரும் 26ம் தேதி மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இருப்பதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இதன் காரணமாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் முத்துக்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர் முத்துக்குமார் திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சரின் அறிக்கையில், “திருநெல்வேலியில் 30 ஆண்டுகளாக பல்வேறு ஊடக நிறுவனங்களில் செய்தியாளராகப் பணியாற்றி, தற்போது பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்டசெய்தியாளராகப் பணியாற்றி வந்த திரு. முத்துக்குமார் அவர்கள் நேற்றிரவுகங்கைகொண்டான் பகுதியில் செய்தி சேகரிக்க இருசக்கர வாகனத்தில் சென்றபோது, […]
Continue reading …
தலைமை செயலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகிறார்கள் என்ற தகவல் கசிந்ததால் ஊடகங்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அமைச்சர்கள் பொன்முடி, ஏவ வேலு மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் மாவட்ட ஆட்சியருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பிய நிலையில் நீர்வளத் துறை தலைமை பொறியாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை செய்ய இருப்பதாக கூறப்பட்டது. இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய ரிசர்வ் […]
Continue reading …
ஆவின் நிறுவனம் நவம்பர் 25 முதல் பச்சை நிற பால் விற்பனையை நிறுத்துவதாகவும், அதற்கு பதிலாக டிலைட் ஊதா நிற பால் விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. பச்சை நிற பால் பாக்கெட்டை தமிழகம் முழுதும் 25ம் தேதி முதல் நிறுத்த ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் விரும்பும் பால் பாக்கெட்டாக பச்சை நிற பால் இருந்தது. இதில் 4.5 சதவீத கொழுப்பு சத்து இருந்தது, அதிக கொழுப்பு சத்து […]
Continue reading …