Home » Entries posted by Shankar U (Page 186)
Entries posted by Shankar

இருசக்கரவாகனங்களில் சாகசம்; புகாரளிக்க இலவச எண்!

Comments Off on இருசக்கரவாகனங்களில் சாகசம்; புகாரளிக்க இலவச எண்!

பொதுஇடங்களில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்யும் இளைஞர்கள் மீது புகார் அளிக்க இலவச எண் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி சமயபுரத்தில் பைக்கில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்து, பைக் சாகசத்தில் ஈடுபட்ட தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்ட சிலரை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக மொத்தம் 13 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. அதேபோல் அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்ததுதுறைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். வீலிங் செய்து பொதுமக்களை அச்சுறுத்தும் […]

Continue reading …

காவல்துறை விழிப்புணர்வு பேரணி!

Comments Off on காவல்துறை விழிப்புணர்வு பேரணி!

இளைய தலைமுறையினர் சமீபத்தில் போதைப் பொருட்களுக்கு அதிகமாக அடிமையாகி கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு ஆந்திரா, ஒடிசா மற்றும் வட மாநிலங்களில் இருந்து போதைப் பொருட்கள் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து தமிழ்நாடு முழுதும் விநியோகம் செய்யப்படுகிறது. இளைய சமுதாயத்தினர் இந்த போதை பொருட்கள் பழக்கத்திலிருந்து மீட்பதற்காக தமிழக அரசு பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை பல நடவடிக்கைகள் எடுத்தாலும் பொதுமக்களும், இளைய சமுதாயத்தினரும் போதைப் பொருட்களின் தீங்கினை […]

Continue reading …

கணித ஆசிரியர்களுக்கு உதயநிதி வேண்டுகோள்!

Comments Off on கணித ஆசிரியர்களுக்கு உதயநிதி வேண்டுகோள்!

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டு வகுப்புகளை கடன் வாங்காதீர்கள் என கணித ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பேசியபோது, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு இந்திய அரசுக்கு வழிகாட்டும் வகையில் செயல்பட்டு வருகிறது. இல்லம் தேடி கல்வி முதல் வாசிப்பு இயக்கம் வரை 50க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகளை பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளது, கணக்கு மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் விளையாட்டு வகுப்புகளை கடன் […]

Continue reading …

சர்க்கரை நோயாளிகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

Comments Off on சர்க்கரை நோயாளிகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!

மருத்துவ நிபுணர்கள் விரைவில் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை 20 கோடியை தொடலாம் என எச்சரிக்கிறார்கள். கடந்த காலங்களை விட இந்தியாவில் சமீபமாக அதிகமானோர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் சிறுவர்கள், இளைஞர்களுக்கு கூட சர்க்கரை நோய் தென்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஒரு புள்ளிவிவரத்தின்படி உலக அளவில் 7 பேருக்கு சர்க்கரை வியாதி ஏற்பட்டால் அதில் ஒருவர் இந்தியராக உள்ளாராம். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சர்க்கரை நோயினால் விரைவில் இந்தியாவில் 20 கோடி பேர் […]

Continue reading …

8 மாவட்டங்களுக்கு கனமழை: வானிலை எச்சரிக்கை!

Comments Off on 8 மாவட்டங்களுக்கு கனமழை: வானிலை எச்சரிக்கை!

வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. சற்றுமுன் ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அப்பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிகையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதேபோல் செங்கல்பட்டு, […]

Continue reading …

துபாயில் தீபாவளி கொண்டாடிய கார்த்தி!

Comments Off on துபாயில் தீபாவளி கொண்டாடிய கார்த்தி!

‘ஜப்பான்’ திரைப்படம் கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இத்திரைப்படத்திற்காக சென்னை, கொச்சி, மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் மிக தீவிரமாக விளம்பர நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் அடுத்தகட்டமாக துபாய்க்கு வருகை தந்த கார்த்தி, தனது 25வது படத்தை சிலிகான் ஓயாசிஸ் மாலில் புரமோட் செய்தார். இந்நிகழ்ச்சியில் கார்த்தி “ஜப்பான்” திரைப்படத்தில் நகைச்சுவை கலந்த எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது, ரோலக்ஸ் மற்றும் ராக்கெட் ராஜா இருவரின் கலவையாக எனது கதாபாத்திரம் […]

Continue reading …

பட்டாசு வெடித்தபோது மாணவனுக்கு நேர்ந்த சோகம்!

Comments Off on பட்டாசு வெடித்தபோது மாணவனுக்கு நேர்ந்த சோகம்!

மாணவர் ஒருவர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் கை விரல்கள் துண்டானது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 8வது வார்டு பகுதியைச் சேர்ந்த ஜெயபிரபு – நதியா தம்பதி 15 வயது மகன் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதின் ஆர்வம் குழந்தைகளிடம் அதிகமாகவேதான் இருக்கும். அவ்வகையில் ஜெயபிரபுவின் மகனும் அவரிடம் பணம் வாங்கி பட்டாசு வாங்கி அது வெடிக்கிறதா என சோதனை செய்வதற்காக […]

Continue reading …

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை!

Comments Off on தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை!

திடீரென தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னை புறநகர் பகுதிகளில் 3 இடங்களில் சோதனை செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இன்று அதிகாலை திடீரென சென்னையை அடுத்த பள்ளிக்கரணை, படப்பை, பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் […]

Continue reading …

“இந்தியன் 2” படத்தின் தகவல் சொன்ன கமல்!

Comments Off on “இந்தியன் 2” படத்தின் தகவல் சொன்ன கமல்!

“இந்தியன் 2” கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து பார்த்ததில் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவை படக்குழுவினர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் மேலும் சில காட்சிகளை படமாக்க வேண்டியுள்ளதாம். […]

Continue reading …

அமைச்சர் எ.வ.வேலுவின் பேச்சு!

Comments Off on அமைச்சர் எ.வ.வேலுவின் பேச்சு!

கடந்த ஐந்து நாட்களாக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அது மட்டுமின்றி தமிழகத்திலுள்ள முன்னணி கட்டுமான நிறுவனங்களான காசா கிராண்ட் மற்றும் அப்பாசாமி நிறுவனங்களின் அலுவலகங்களில் சோதனை நடந்து வருகிறது. ஒரு பக்கம் சோதனை நடந்து கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம், “இந்த சோதனைகளுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். நாடாளுமன்ற தேர்தல் அச்சம் காரணமாக வருமான வரி சோதனை மூலம் எங்களுக்கு அச்சுறுத்தல் தரப்படுகிறது. காசா […]

Continue reading …