
டார்க் வெப் தளத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சர்வர்களிலிருந்து 81 கோடி பேரின் தரவுகள் கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சர்வர்களிலிருந்து 81 கோடி பேரின் தரவுகள் டார்க் வெப் தளத்தில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கொரோனா பெருந்தொற்றுப் பரவலின்போது, மக்கள் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் அளித்த பெயர், தொலைபேசி எண் மற்றும் முகவரியுடன் கூடிய ஆதார் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கசிந்துள்ளன. […]
Continue reading …
“அன்னப்பூரணி” திரைப்படம் நயன்தாராவின் 75வது படம். இப்படத்தின் ரிலீஸ் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகை நயன்தாரா திருமணத்துக்குப் பின் நடித்த “கனெக்ட்” திரைப்படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அவர் அட்லி இயக்கும் “ஜவான்” படத்தில் நடித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. நயன்தாரா 75 என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. நயன்தாரா 75வது படத்தின் -தலைப்பு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு “அன்னப்பூரணி” என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் ஹீரரோவாக ஜெய் நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் […]
Continue reading …
பல்வேறு விஷயங்களில் செயலற்றவராக இருப்பதன் மூலம் மக்களின் உரிமைகளை ஆளுநர் பறித்து வருகிறார் என தமிழக அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாகவும், நீட் விலக்கு மசோதா, சிறைக்கைதிகள் விடுதலை, டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனம் உள்ளிட்டவற்றில் எந்த முடிவும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. மேலும் முக்கியமான விவகாரங்களில் ஆளுநர் உடனுக்குடன் முடிவு எடுப்பதில்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாக […]
Continue reading …
“ஜென்டில் மேன் 2” திரைப்படத்தை மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் ஜென்டில்மேன் பிலிம் இண்டர்னேஷ்னல் தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம். கி.கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், சேத்தன் கதாநாயகனாக நடிக்கிறார். நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்று புறங்களில் பதினைந்து நாட்கள் நடைபெற்று நிறைவுற்றது. இதில், சேத்தன், நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால், படவா கோபி, சுதா ராணி, சித்தாரா, லதா, […]
Continue reading …
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் கடந்த அக்டோர்பர் 19ம் தேதி வெளியான திரைப்படம் “லியோ.” உலகம் முழுதும் இத்திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதோடு வசூலையும் குவித்து வருகிறது. இப்படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது. இப்பட ரிலீஸுக்கு முன்பு, இப்பட ரிலீஸுக்குப் பின்பும் லோகேஷ் கனகராஜ் பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து பிரபல சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தனன் தன் வலைதள பக்கத்தில் “படிச்சவனோ, பாமரனோ, ஒரு […]
Continue reading …
தாய்லாந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளில் முக்கிய சுற்றுலாதளங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்நாட்டிற்கு உலகம் முழுவதிலுமிருந்து, பல சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சினிமா பட ஷூட்டிங்கிற்கும் செல்கின்றனர். இந்தியர்கள் தாய்லாந்து செல்வதற்கு விசா தேவையில்லை என்று தாய்லாந்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதில், தாய்லாந்து நாட்டிற்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா தேவையில்லை; அடுத்த மாதம் முதல் 2024ம் ஆண்டு மே வரை நீக்கப்படுகிறது. அதன்படி, இந்தியர்கள் விசா இல்லாமல் 30 நாட்கள் வரை தாய்லாந்தில் தங்க […]
Continue reading …
இன்று தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு தேதியை அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு வரும் நவம்பர் 7ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு இன்று முதல் வரும் நவம்பர் 7ம் தேதி வரை நடைபெறும் எனவும், மாநில ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு வரும் நவம்பர் 7 முதல் 15ம் தேதி வரை நடடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் tnmedicalselection.org […]
Continue reading …
திமுக எம்.பி., டி.ஆர்.பாலு இன்று டில்லியில் மத்தியமைச்சர் முரளிதரனை நேரில் சந்தித்தார். முதலமைச்சர் ஸ்டாலின் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரிக்கை விடுத்தும், மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக எழுதிய கடிதத்தையும் மத்திய அமைச்சரிடம் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு வழங்கினார். மேலும் மத்திய அமைச்சருடனான இந்த சந்திப்பின்போது, மீனவர்களின் குடும்பத்தினரும் உடனிருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஐந்து விசைப்படகுகள் மற்றும் அதிலிருந்து மீனவர்களை இலங்கை […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “பொய் பேசுவதில் ஆஸ்கார் அவார்டு கொடுக்க வேண்டும் என்றால் அது ஸ்டாலின் அவர்களுக்கு தான் கொடுக்க வேண்டும்” என பேசியுள்ளார். அவர் இதுகுறித்து பேசும்போது, “கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல், வாக்குறுதிகளை 100% நிறைவேற்றி விட்டோம் என்று முதலமைச்சர் கூறுகிறார். மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதை கொஞ்சம் கூட கவலை இல்லாமல் வாய்க்கு வந்தபடி இஷ்டப்படி நூறு சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பொய் பேசுகிறார். இது தமிழ்நாட்டின் மக்களின் காதில் […]
Continue reading …
தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வருகிற மசோதாவை அப்படியே ஏற்று கையெழுத்து போடுவதற்கு ஆளுநர் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ஆளுநர்கள் ரப்பர் ஸ்டாம்புகள் இல்லை, மசோதாக்களின் சாதக பாதங்களை ஆராய்வது தான் ஆளுநரின் கடமை. ஒரு மசோதா வந்ததும், அதற்கு உடனே கையெழுத்து போட வேண்டும் என மாநில அரசுகள் எதிர்பார்க்கின்றன. மசோதாவை திருப்பி அனுப்பினால், பாஜககாரர் போல் செயல்படுவதாக முத்திரை குத்துகின்றனர். வருகிற மசோதாவை அப்படியே ஏற்பதற்கு ஆளுநர் […]
Continue reading …