
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்த விளக்கத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி பேசிய கருத்துகள் தேசியளவில் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளன. தொடர்ந்து உதயநிதிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் பேசி வருகின்றனர். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உதயநிதிக்கு ஆதரவாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “சனாதனக் கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும் என்றுதான் அமைச்சர் உதயநிதி பேசினாரே தவிர எந்த மதத்தையும் மத நம்பிக்கையையும் புண்படுத்தும் […]
Continue reading …
ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் தன்னை தானே செல்பி எடுத்துக் கொண்டுள்ளது சந்திரயான், மங்கள்யான் திட்டங்கள் மூலம் நிலவிலும், செவ்வாய் கிரகத்திலும் கால் பதித்து இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ உலக அரங்கில் பெரும் சாதனையை படைத்து வருகிறது. அதை தொடர்ந்து அடுத்த கட்டமாக சூரியன் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள ஆதித்யா திட்டத்தை தொடங்கியுள்ளது. அதன்படி சூரியன் குறித்த ஆய்வுக்காக ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த 2ம் […]
Continue reading …
“இந்தியன் 2” சங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் வெளியாக உளள்து. அவர் நடிக்கவிருக்கும் “கமல் 233” என்ற படத்திற்காக பயிற்சி செய்து வரும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. எச் வினோத் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் “கமல் 233” படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அமெரிக்காவில் இருக்கும் கமலஹாசன் இந்த படத்திற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். […]
Continue reading …
கர்நாடக அரசுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு குறைவான அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக அரசுடன் தமிழ்நாட்டிற்கு விவசாய பயன்பாடுகளுக்கு தண்ணீர் திறந்து விடுவதில் தொடர்ந்து பிரச்னைகள் இருந்து கொண்டுதான் உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகளும் சமீபத்தில் போராட்டம் செய்தனர். எனினும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு 15 நாட்களுக்குள் 6.48 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என முடிவு […]
Continue reading …
முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரத்தில் 2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 30ல் பிறந்த சுதந்திர போராட்டத் தலைவரும், ஆன்மீகவாதியுமான முத்துராமலிங்க தேவர் அக்டோபர் 30ல் மறைந்தவர். பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் அக்டோபர் 30ல் ஆண்டுதோறும் குருபூஜை நடந்தப்படுகிறது. அதுபோல செப்டம்பர் 11, 1957-ல் முதுகுளத்தூரில் கொல்லப்பட்ட சுதந்திர போராட்ட வீரரும், சமூக போராளியுமான இமானுவேல் சேகரன் நினைவு தினமும் அனுசரிக்கப்படுகிறது. இந்த இரு […]
Continue reading …
உத்தர பிரதேச மாநில சாமியார் உதயநிதி தலையை சீவி வந்தால் 10 கோடி என அறிவித்திருந்தார். தற்போது உதயநிதி கன்னத்தில் காலணியால் அடித்தால் 10 லட்சம் என ஆந்திர மாநில இந்துத்துவ அமைப்பு ஒன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி சனாதனத்தை ஒழிப்போம் என பேசியதால், கன்னத்தில் காலணியால் அடித்தால் 10 லட்சம் பரிசு தரப்படும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் உதயநிதி […]
Continue reading …
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சனாதனம் என்றால் என்ன என்ற அரிச்சுவடி கூட தெரியாமல் அமைச்சர் உதயநிதி பேசி வருகிறார் என்று தெரிவித்தார் இதுகுறித்து அவர் பேட்டியில் கூறும்போது, “சனாதனம் என்பது மனித குலத்தையும் தாண்டி எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தக்கூடியது, சனாதனத்தை பற்றி அரிச்சுவடி கூட தெரியாமல் உதயநிதி பேசுவார், அது தவறானது மற்றும் கண்டிக்கத்தக்கது. இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்ற உணர்வோடு பேசுகின்றனர். இது கைவிடாவிட்டால் மிகப்பெரிய விளைவு உருவாகும். இந்தியா […]
Continue reading …
’இந்தியன் 2’ கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீசாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இறுதிகட்ட ஷூட்டிங் இப்போது நடந்துவரும் நிலையில் இதுவரை படத்தின் வில்லன் யார் என்பதை அறிவிக்கவில்லை. ஆனால் எஸ்.ஜே.சூர்யாதான் வில்லனாக நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வந்தன. இப்போது […]
Continue reading …
இயக்குனர் சி எஸ் அமுதன் “தமிழ்படம் 1” மற்றும் 2 படங்களை இயக்கி தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர். அவர் தன்னுடைய ரூட்டை மாற்றி “ரத்தம்“ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் ஆண்டனி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். முந்தைய படங்களைப் போலில்லாமல், சீரியஸான ஒரு பிரச்சனையை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கியுள்ளார் சி. எஸ் அமுதன். இந்த படம் செப்டம்பர் 28ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]
Continue reading …
பின்லாந்து அரசு உலகிலேயே முதல் முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்துள்ளது. பாஸ்போர்ட் என்பது புத்தக வடிவில் மட்டுமே உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ளது. பின்லாந்து நாட்டில் முதல் முறையாக டிஜிட்டல் பாஸ்போர்ட்டை அறிமுகம் செய்துள்ளது. விமான நிலையங்களில் பயணிகள் காத்திருக்கும் நேரத்தை டிஜிட்டல் பாஸ்போர்ட் குறைத்துள்ளதாகவும் பயணிகள் பயணிகள் மிக எளிமையாக பயணம் செய்ய முடியும் என்றும் பின்லாந்து அரசு அறிவித்துள்ளது. சில நகரங்களில் மட்டும் தற்போது டிஜிட்டல் பாஸ்போர்ட் சோதனை முயற்சியாக […]
Continue reading …