Home » Entries posted by Shankar U (Page 205)
Entries posted by Shankar

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் ரஜினிகாந்த்வுடன் சந்திப்பு

Comments Off on முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் ரஜினிகாந்த்வுடன் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் இன்று அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் நேரில் சந்தித்துள்ளார். அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டு, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை அதிமுகவில் இருந்து நீக்கிய சிறப்பு தீர்மானத்திற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. ஏற்கனவே அமமுக பொதுச்செயலாளர் தினகரனுடன் இணைந்து அரசியலில் பயணிக்கப் போவதாக ஓபிஎஸ் அறிவித்தார். நீதிமன்றத் தீர்ப்பினால், அவர் தினகரன் மற்றும் சசிகலாவுடன் இணைந்து அரசியலில் இணைந்து பணியாற்றுவாரா? அல்லது தினகரனைப் போல் தனிக்கட்சி […]

Continue reading …

ஜான்வி கபூருக்கு நிச்சயதார்த்தமா?

Comments Off on ஜான்வி கபூருக்கு நிச்சயதார்த்தமா?

ஜான்வி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்தமகளாவார். இவர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வரும் அவர், தமிழ் படங்களிலும் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். சமூகவலைதளங்களில் தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஜான்வி கபூர், நடிகரும் முன்னாள் மராட்டிய முதலமைச்சரின் பேரனான ஷிகர் பஹாரியை காதலிப்பதாக பாலிவுட் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் […]

Continue reading …

சுங்கக்கட்டண உயர்வு!

Comments Off on சுங்கக்கட்டண உயர்வு!

மத்திய அரசு செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்வு அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தது. நேற்று நள்ளிரவு முதல் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே ஏப்ரல் மாதம் நாடு முழுவதிலும் உள்ள பல சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இன்று முதல் தமிழகத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், திருச்சி, மேட்டுப்பட்டி, உளுந்தூர்பேட்டை, தூத்துக்குடி, எலியார்பத்தி சாவடிகளில் கட்டணம் 5 […]

Continue reading …

அடுத்த விண்கல திட்ட இயக்குனர் பெண் விஞ்ஞானியா?

Comments Off on அடுத்த விண்கல திட்ட இயக்குனர் பெண் விஞ்ஞானியா?

தென்காசியை சேர்ந்த பெண் இயக்குனர் நாளை விண்ணில் ஏவப்படும் ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நாளை அதாவது செப்டம்பர் இரண்டாம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை ஏவ திட்டமிட்டுள்ளது. இதற்கான கவுண்ட்டவுன் தொடங்கி விட்டதாகவும் இந்த செயற்கைக்கோளில் ஆதித்யா எல்-1 விண்கலம் இணைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும் என்றும் சூரியனின் வெப்பநிலை உள்பட பல்வேறு ஆய்வுகளை செய்யும் என்றும் […]

Continue reading …

சென்னை மெட்ரோவின் புதிய சாதனை!

Comments Off on சென்னை மெட்ரோவின் புதிய சாதனை!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறைந்த கட்டணம், டிராபிக் பிரச்சனை இல்லாமல் சுலபமான பயணம் ஆகியவை காரணமாக மெட்ரோ ரயில் அதிக பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 85.89 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை […]

Continue reading …

காதலியின் கழுத்தை அறுத்த காதலன்!

Comments Off on காதலியின் கழுத்தை அறுத்த காதலன்!

காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு காதலன் தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் திருப்பூரில் நிகழ்ந்துள்ளது. திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக 21 வயது சத்தியஸ்ரீ என்பவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் 25 வயதில் நரேந்திரன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக நட்பு இருந்ததாகவும் அதன் பின் இருவரும் காதலித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் திடீரென இருவருக்குமிடையே சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இன்று காலை சத்தியஸ்ரீ பணிபுரியும் மருத்துவமனைக்கு வந்த நரேந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் அப்போது […]

Continue reading …

‘ஆதித்யா எல் 1’ கவுண்டவுன் ஸ்டார்ட்

Comments Off on ‘ஆதித்யா எல் 1’ கவுண்டவுன் ஸ்டார்ட்

‘ஆதித்யா எல் 1’ விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட் விண்ணில் பாய்வதற்கான கவுண்டவுன் இஸ்ரோ நிறுவனத்தில் இன்று தொடங்கியது. இந்திய ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்வெளியில் பல புதிய ஆய்வுகளை மேற்கொண்டு சாதனை படைத்து வருகிறது, சந்திரயான் 1 மற்றும் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி சாதனை படைத்தன. சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ நாளை அதாவது செப்டம்பர் இரண்டாம் தேதி ஆதித்யா எல்-1  என்ற விண்கலத்தை ஏவ திட்டமிட்டுள்ளது. அதன்படி, ‘ஆதித்யா எல் […]

Continue reading …

சூப்பர் ஸ்டாரை பற்றி விசாரித்த விஜய்!

Comments Off on சூப்பர் ஸ்டாரை பற்றி விசாரித்த விஜய்!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள “சந்திரமுகி 2” திரைப்படம் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. பி.வாசு இயக்கத்தில், கீரவாணி இசையில் அமைந்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸிடம் சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த அவர், “விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ஆகும் ஆசை எதுவுமில்லை. அவராவே ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பார். நாம் தான் நமக்குப் போட்டி என்று மேடையில் கூறிவிட்டு அவர் எப்படி […]

Continue reading …

பிரபல நடிகை ஐஆர்எஸ் அதிகாரியுடன் டேட்டிங்

Comments Off on பிரபல நடிகை ஐஆர்எஸ் அதிகாரியுடன் டேட்டிங்

நடிகை நவ்யா நாயர் கைது செய்யப்பட்ட சுங்கத்துறை அதிகாரியுடன் நெருங்கிப் பழகியது தெரியவந்துள்ளது. நடிகை நவ்யா நாயர் மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமானவர். இவர், “இஷ்டம்,” “அழகிய தீயே,” “ஆடம் கூத்து,” “பொக்கிஷம்“ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2010ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷ் மேனனை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு சாய் கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். இந்திய வருவாய்துறை அதிகாரியான சச்சின் சாவந்த், வருமானத்திற்கு அதிகமாக ரூ.2 கோடியே […]

Continue reading …

தொகுப்பூதிய பணியாளர்கள் முழுநேர பணியாளர்களாக மாற்றம்

Comments Off on தொகுப்பூதிய பணியாளர்கள் முழுநேர பணியாளர்களாக மாற்றம்

98 பகுதி நேர தொகுப்பூதிய தூய்மைப் பணியாளர்கள் ஆதிதிராவிட நல விடுதிகளில் பணிபுரிகின்றனர். இவர்கள் தற்போது முழு நேர பணியாளர்களாக மாற்றப்பட்டுள்ளனர். தருமபுரி, ஈரோடு, கோவை, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பணியாளர்கள் முழு நேர பணியாளர்களாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அதில், சிறப்பு காலமுறை ஊதியம் நிலை ரூ.4100, 12,000 என்ற ஊதியத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். பகுதி நேர தொகுப்பூதிய […]

Continue reading …