
பிளஸ் ஒன் மாணவி பெற்ற தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலன் மற்றும் அவரது நண்பர்களை வைத்து கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் தேனி அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி அருகே பிளஸ் 1 படிக்கும் மாணவி அதே பகுதியைச் சேர்ந்த முத்து காமாட்சி என்பவரை காதலித்தார். இதனை அடுத்து மாணவிகளின் தந்தை வேணுகோபால் மகளை கண்டித்ததோடு பெரிய குளத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்து அங்கு படிக்க வைத்தார். இந்நிலையில் […]
Continue reading …
ஆனந்த் மகேந்திரா விரைவில் செஸ் வீரர்கள் பிரக்ஞானந்தாவுக்கு விலை உயர்ந்த எலக்ட்ரிக் கார் பரிசளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். பிரக்ஞானந்தா சமீபத்தில் நடந்த உலக கோப்பை செஸ் போட்டியில் டைப்ரைக்கர் சுற்றில் இரண்டாம் இடம் பெற்றார். அவருக்கு இந்தியா முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வண்ணம் உள்ளது. தற்போது பரிசு மழையும் குவிந்து வருகிறது. உலக கோப்பை செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற பிரக்ஞானந்தா பெற்றோருக்கு எலக்ட்ரிக் காரை பரிசாக அளிக்க விரும்புவதாக ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார். இது […]
Continue reading …
நடிகர் ரஜினிகாந்த் “ஜெயிலர்” மற்றும் “லால் சலாம்” ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு த.செ.ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்குமென கூறப்பட்டது. ஆனால் லைகாவின் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக இன்னும் தொடங்கப்பட வில்லை எனத் தெரிகிறது. இப்போது செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இத்திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே பஹத் பாசில், மஞ்சு வாரியர், நானி, ஷர்வானந்த் மற்றும் அமிதாப் பச்சன் […]
Continue reading …
வரும் செப்டம்பர் 19 முதல் ஜியோ ஏர்ஃபைபர் 5ஜி அதிவேக இண்டர்நெட் பிராண்ட்பேன்ட் சேவை ஆரம்பம் என முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் 46-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பேசியபோது, “கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய ஜியோ 5ஜி சேவை பெருநகரங்களில் தற்போது பயன்பாட்டில் உள்ளது. வரும் டிசம்பருக்குள் இந்தியா முழுவதும் ஜியோ 5ஜி சேவை விரிவுப்படுத்தப்படும். மேலும் ஜியோ ஏர் ஃபைபர் திட்டத்திற்கான அறிமுக பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து […]
Continue reading …
சமீபத்தில் நடிகை சமந்தா நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். இவர்களது விவாகரத்து செய்தியை ஊடகங்களும் ரசிகர்களும் பரபரப்பாக பேசினார்கள். விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் இருவரும் நடித்து வருகின்றனர். சமீபத்தில் சமந்தா நடிப்பில் “காத்து வாக்குல ரெண்டு காதல்” மற்றும் “சகுந்தலம்” ஆகிய திரைப்படங்கள் ரிலீசாகின. இதையடுத்து “குஷி” திரைப்படம் ரிலீசாகவுள்ள நிலையில் அத்திரைப்படத்தின் டிரெயிலர் சமீபத்தில் ரிலீசானது. “ஹாஸ்டல் பாய்ஸ்” படத்தை திரையரங்குக்கு பார்க்க வந்த நாக சைதன்யா இடைவேளையில் “குஷி” படத்தின் டிரெயிலர் திரையிடப்பட்ட […]
Continue reading …
கடந்த 2015 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் “தனி ஒருவன்.” இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இதுகுறித்து ஏ.எல்விஜய் இயக்கத்தில் உருவான வீடியோ ஒன்றும் வெளியானது. “தனி ஒருவன்” திரைப்படத்தின் முதல் பாகத்தில் அரவிந்த் சாமியின் வில்லன் சித்தார்த் கேரக்டர் மரணமடையும் வகையில் இருக்கும். “தனி ஒருவன் 2” திரைப்படத்தில் அரவிந்த்சாமி வில்லன் கேரக்டருக்கு மாற்றாக வேறு யாரும் இல்லை […]
Continue reading …
கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் கார்களுக்கு மாற்றாக 100% எத்தனாலில் இயங்கும் கார் குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தது. இன்று முதல் மத்திய அமைச்சர் இந்த காரை அறிமுகம் செய்து வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இன்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பெட்ரோல் டீசல் இல்லாமல் 100% எத்தனாலில் இயங்கும் டொயோட்டா இன்னோவா காரை அறிமுகப்படுத்தவுள்ளார். சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அதிக புகையை […]
Continue reading …
நாளை வானில் தோன்றும் ப்ளூ மூன் (நீல நிலவு) காண தவறாதீர்கள். அடிக்கடி அதிசயமான வானியல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவ்வாறாக பூமியை சுற்றி வரும் நிலவு சில சமயங்களில் சுற்றுவட்ட பாதையில் பூமிக்கு அருகே வருவதும் உண்டு. அந்த சமயங்களில் நிலவு நீல நிறத்தில் பெரிதாகவும், பிரகாசமாகவும் காட்சியளிக்கும். இதை ப்ளூ மூன் என அழைக்கிறார்கள். கடந்த 2021ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் இந்த ப்ளூ மூன் தோன்றியது. அதற்கு பிறகு நாளை (ஆகஸ்ட் 30) […]
Continue reading …
இனி அரசு பொது இ-சேவை மையங்களிலும் ஏடிஎம் மையங்களில் பணம் பெறுவது போல பணம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு பொது இ-சேவை மையம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் அரசு அலுவலக பகுதிகளிலும் செயல்பட்டு வருகிறது. இந்த இ-சேவை மையங்கள் மூலமாக அரசு சார்ந்த பல சான்றிதழ்கள், சரிபார்ப்புகளை மக்கள் மேற்கொள்கின்றனர். ஒரு விவீஸீவீ பிuதீ ஆக செயல்படும் இந்த இ-சேவை மையங்களில் பணம் எடுக்கும் வசதியையும் அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வங்கி […]
Continue reading …
கல்லூரி மாணவிகளை பயன்படுத்தி பழுதாகி நின்ற பேருந்தை தள்ளிய வீடியோ இணையதளத்தில் வைரலானது. அப்பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உள்பட நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. நாகர்கோவிலில் அரசு பேருந்தில் ஏராளமான கல்லூரி மாணவிகளும் பயணம் செய்தனர். திடீரென அந்த பேருந்து பழுதாகி நின்று விட்டது. இதனை அடுத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கல்லூரி மாணவிகளை இறங்கி தள்ள பயன்படுத்தியதாக தெரிகிறது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து போக்குவரத்து துறையின் […]
Continue reading …