Home » Entries posted by Shankar U (Page 212)
Entries posted by Shankar

முதல் ரேபிட் சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி!

Comments Off on முதல் ரேபிட் சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி!

இன்று நடைபெற்ற டைபிரேக் சுற்றில் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் 10வது உலகக்கோப்பை செஸ் தொடர் தற்போது நடந்து வருகிறது.இப்போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதி போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தின் 35வது நகர்தலுக்கு பிறகு முதல் சுற்று ட்ரா ஆன நிலையில், நேற்று இரண்டாவது சுற்று நடைபெற்றது. இப்போடியில் உலக சாம்பியன் கார்ல்ஸ்னுடன் சமபலத்தில் பிரக்ஞானந்தா போராடினார். முதல் சுற்றைப் போலவே இரண்டாவது சுற்றும் டிராவில் முடிந்தது. எனவே டைபிரேக்கர் மூலம் […]

Continue reading …

இஸ்ரோவுக்கு வாழ்த்துக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Comments Off on இஸ்ரோவுக்கு வாழ்த்துக் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இன்று விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையில் இறங்கி சாதனை படைத்துள்ளது. சந்திரன் பற்றிய ஆராய்ச்சியில் இதற்கு முன்னதாக உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்து, இந்தியா, சந்திரயான் 1, சந்திரயான் 2 ஆகிய விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி அங்கு நீர் உள்ளதாக கண்டறிந்தது. இதையடுத்து, சமீபத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பிய நிலையில், விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்காக வெற்றிகரமாக […]

Continue reading …

செஸ் உலகக்கோப்பை 2 வது சுற்று டிரா!

Comments Off on செஸ் உலகக்கோப்பை 2 வது சுற்று டிரா!

அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் 10-வது உலகக்கோப்பை செஸ் தொடர் தற்போது நடந்து வருகிறது. 2வது சுற்றும் தற்போது டிராவில் முடிந்துள்ளது. அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் 10-வது உலகக்கோப்பை செஸ் தொடர் தற்போது நடந்து வருகிறது. நேற்று இறுதி கட்டத்தை எட்டிய இந்த தொடரில் இந்திய இளம் க்ராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவும், 5 முறை உலக சாம்பியனான நார்வே நாட்டை சேர்ந்த மாக்னஸ் கார்ல்சனும் மோதி வருகின்றனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை செஸ் தொடரின் […]

Continue reading …

இயக்குனர் வீரமுத்துவேலுக்கு சக விஞ்ஞானிகள் பாராட்டு

Comments Off on இயக்குனர் வீரமுத்துவேலுக்கு சக விஞ்ஞானிகள் பாராட்டு

சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்காக வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இன்று மாலை 5.44 மணி முதல் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவது குறித்த நேரலை ஒளிபரப்பு தொடங்கியது. அதேபோல், சந்திராயான் 3 லேண்டரை நிலவில் தரையிறக்கும் செயல்முறையில் இஸ்ரோ வெற்றிகரமாகச் செயல்பட்டு, விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கிச் சாதனை படைத்தது. இதற்கு பிரதமர் மோடி, “இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா இப்போது நிலவில் இருக்கிறது’’ […]

Continue reading …

ஆண்டுக்கு இரு பொதுத்தேர்வா!

Comments Off on ஆண்டுக்கு இரு பொதுத்தேர்வா!

மத்திய கல்வி அமைச்சகம் பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ வகுப்புகளுக்கு இனி ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. புதிய கல்வி கொள்கையின்படி இனி பிளஸ்-1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு தேர்வில் எதில் அதிக மதிப்பெண்கள் மாணவர்கள் எடுக்கின்றார்களோ அந்த மதிப்பெண் […]

Continue reading …

நிலவுக்கு விண்கலம் அனுப்பும் ஜப்பான்!

Comments Off on நிலவுக்கு விண்கலம் அனுப்பும் ஜப்பான்!

ஜப்பான் நாடு நிலவுக்கு விண்கலம் அனுப்ப முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நிலவுக்கு இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகள் விண்கலம் அனுப்பியது. இதில் ரஷ்யாவின் விண்கலம் நிலவில் மோதி தோல்வியடைந்த நிலையில் இந்தியாவின் விக்ரம் லேண்டெர் இன்று மாலை 6 மணிக்கு நிலவில் தரையிறங்கியது. நிலவை ஆய்வு செய்ய ஜப்பான் ஆகஸ்ட் 26ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு ஸ்லிம் என்ற விண்கலத்தை செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் இந்தியா […]

Continue reading …

தேசிய கொடியில் கவனமாக இருந்த மோடி

Comments Off on தேசிய கொடியில் கவனமாக இருந்த மோடி

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார் பிரதமர் மோடி. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகித்து வருகின்றன. இந்த அமைப்பின் சார்பில் 15வது உச்சி மாநாடு ஆப்பிரிக்க நாடான தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க்கில், நேற்று தொடங்கியது. இம்மாநாட்டில் பங்கேற்ற நாடுகளின் தலைவர்கள் குழு புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, தென் ஆப்பிரிக்கா அதிபர் சிரில் ராமபோசாவுடன், இந்திய பிரதமர் மோடி ஆகியோர் ஒன்றாக […]

Continue reading …

மருத்துவமனையில் தகராறு செய்த மேயர்

Comments Off on மருத்துவமனையில் தகராறு செய்த மேயர்

தற்போது உத்தரபிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக மேயர் சுஸ்மா கார்வெல், லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனை வருகை தந்தார். அங்குள்ள ஐசியு அறைக்குள் ஷூ அணிந்துகொண்டு நுழையும்போது, பணியாளர்கள் அவரை தடுத்ததாகவும், இதில், மேயர் மற்றும் பணியாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னர், மருத்துவமனை வளாகத்திற்கு ஒரு புல்டோசர் வரவழைக்கப்பட்டதாகவும், இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகிறது. இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகம் மேயர் […]

Continue reading …

ஜவான் படத்தில் 6 ஸ்டண்ட் இயக்குனர்கள்!

Comments Off on ஜவான் படத்தில் 6 ஸ்டண்ட் இயக்குனர்கள்!

தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிப்பில் இத்திரைப்படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ் இயக்குனர் மற்றும் தமிழ் நடிகர்கள் பட்டாளம் இருப்பதால் இந்த படத்துக்கு தமிழ்நாட்டிலும் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தின் விநியோக உரிமை 16 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது. […]

Continue reading …

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து கூறிய பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர்!

Comments Off on இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து கூறிய பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர்!

பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். சந்திராயன் 3 விண்கலம் நிலவில் தரையிறங்க இருக்கும் நிகழ்வை உலகமே பார்க்க மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சவுத்ரி பவாத் உசேன் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் மட்டுமின்றி உலக நாடுகள் இஸ்ரோவின் இந்த முயற்சியை வியந்து பார்த்து வருகிறது. நிலவின் தென்துருவத்தில் இதுவரை எந்த நாடும் லேண்டரை தரையிறக்கியது இல்லை. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள். சந்திராயன் […]

Continue reading …