Home » Entries posted by Shankar U (Page 214)
Entries posted by Shankar

50 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர்!

Comments Off on 50 அடி பள்ளத்தில் விழுந்த வாலிபர்!

22 வயது வாலிபர் அருவியில் குளித்து கொண்டே செல்பி எடுத்த போது 50 அடி பள்ளத்தில் விழுந்து உயிருக்காக போராடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. செல்பி எடுக்கும் மோகத்தால் எத்தனை ஆபத்துகள் வந்தாலும் மக்களுக்கு விழிப்புணர்வில்லை. ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்க கூடாது என ஏற்கனவே பலமுறை அறிவுத்தப்பட்டும், ஆபத்தை கண்டு கொள்ளாமல் பல இளைஞர்கள் செல்பி எடுத்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் தடை செய்யப்பட்ட மாசிலா […]

Continue reading …

விஜய் தேவரகொண்டாவின் ஒபன் டாக்

Comments Off on விஜய் தேவரகொண்டாவின் ஒபன் டாக்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்தேவரகொண்டா ‘எனக்குப் பிடித்த நடிகர் விஜய், அவரது படத்தின் தலைப்பை எனது படத்தில் வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தேவரகொண்டா சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “குஷி.” ஷிவ் நிர்வானா இயக்கத்தில் மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்திற்கு “குஷி” என்று பெயர் வைத்துள்ளது பற்றி நடிகர் விஜய் தேவரகொண்டா கூறும்போது, “விஜய் சாரின் “குஷி” படம் மிகப்பெரிய பிளாக் […]

Continue reading …

அரசுக்கு வேறென்ன தலைகுனிவு வேண்டும்? எடப்பாடி பழனிசாமி

Comments Off on அரசுக்கு வேறென்ன தலைகுனிவு வேண்டும்? எடப்பாடி பழனிசாமி

மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் கல்லூரி வளாகத்தில் குண்டு வீசப்பட்டுள்ளது. சென்னை, வேளச்சேரியிலுள்ள கல்லூரி வளாகத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாட்டனி, எக்கனாமிக்ஸ் படிக்கும் மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் டுவிட்டர் பக்கத்தில், “சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் மாணவர்கள் மோதலில் வெடிகுண்டு வீச்சு நடந்துள்ளது என்றால், இந்த ஆட்சியில் சட்டம்- […]

Continue reading …

கேரளா நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் உத்தரவு

Comments Off on கேரளா நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் உத்தரவு

வாடிக்கையாளருக்கு தெரியாமல் மோசடியாக பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டால் அதற்-கு வங்கிதான் பொறுப்பேற்க வேண்டும் என்று கேரள நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் உத்திரவிட்டுள்ளது. வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து மர்ம நபர்கள் மோசடி செய்து பணம் எடுத்து வருவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. கேரளாவில் தன்னுடைய வங்கிக் கணக்கில் இருந்து மோசடியாக பணம் எடுக்கப்பட்டது குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கில் கேரளா நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. […]

Continue reading …

லடாக் பகுதியில் ராகுல் காந்தி பைக் சவாரி!

Comments Off on லடாக் பகுதியில் ராகுல் காந்தி பைக் சவாரி!

இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி லடாக் சென்றுள்ளார். அங்கு அவர் பைக்கில் பயணம் செய்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி லடாக் சென்றுள்ளார். லே என்ற பகுதியிலிருந்து பேங்காங் என்ற ஏரி பகுதிக்கு பைக்கில் சவாரி மேற்கொண்டார். பேங்காங் ஏரியில் தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிரார்த்தனை கூட்டத்திலும் ராகுல் காந்தி கலந்து கொள்ள உள்ளார் என்று கூறப்படுகிறது. […]

Continue reading …

இளம்பெண்ணை கண்காணித்தவர் கைது!

Comments Off on இளம்பெண்ணை கண்காணித்தவர் கைது!

கோவையை சேர்ந்த துப்பறியும் உரிமையாளர் இரண்டு பேர் இளம் பெண்ணை தொடர்ந்து கண்காணித்து பின் தொடர்ந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை செய்தபோது அப்பெண்ணின் கணவரே இளம் பெண்ணின் மீது சந்தேகப்பட்டு துப்பறிய செய்ததாக தெரியவந்துள்ளது. துப்பறியும் நிறுவனங்கள் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் தற்போது வளர்ந்து வருகிறது. திருமணத்திற்கு பெண் பார்க்கும் போது திருமணம் செய்ய போகும் பெண்ணை கண்காணிப்பது, திருமணம் செய்யப் போகும் மாப்பிள்ளையை கண்காணிப்பது உள்ளிட்டவற்றை துப்பறியும் நிபுணர்கள் செய்து தருவார்கள். அந்த […]

Continue reading …

விரலை வெட்டி அமைச்சருக்கு பரிசாக அனுப்பிய நபர்!

Comments Off on விரலை வெட்டி அமைச்சருக்கு பரிசாக அனுப்பிய நபர்!

மாநில உள்துறை அமைச்சருக்கு மஹாராஷ்டிரம் மாநிலம் மும்பையைச் சேர்ந்த தனஞ்செய் என்பவர் தன் ஒரு விரலை வெட்டி அனுப்பியுள்ளார். முதலமைச்சர் ஏக்நத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா (எதிர்ப்பு அணி) பாஜக கூட்டணி ஆட்சி மஹாராஷ்டிரம் மாநிலத்தில் நடந்து வருகிறது. இங்குள்ள மும்பை உல்ஹாஸ் நகரில் நந்தகுமார் தன் குடும்பத்துடன் முகாம் எண் 4. உள்ள அஷாலேபாடா பகுதியில் வசித்து வந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன் தன் மனைவியுடன் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். நந்தகுமார் […]

Continue reading …

அயோத்திக்குச் செல்லும் ரஜினிகாந்த்

Comments Off on அயோத்திக்குச் செல்லும் ரஜினிகாந்த்

நாளை அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் சாமி தரிசனத்திற்காக ரஜினிகாந்த் செல்லவுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அத்துடன் வசூல் சாதனையும் படைத்து வருகிறது. “ஜெயிலர்” திரைப்படம் கடந்த வாரம் வியாழனன்று வெளியானது. ஒரு வாரத்தில் 375.40 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்தது. சென்னை, பிரசாத் லேப்பில் […]

Continue reading …

‘ஜெயிலர்’ படத்தை தடை விதிக்க கட்சி தலைவர் மனு!

Comments Off on ‘ஜெயிலர்’ படத்தை தடை விதிக்க கட்சி தலைவர் மனு!

அரசியல் கட்சி தலைவர் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்தை தடை செய்ய வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை செய்து வருகிறது. ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கியது தவறு என்று தேசிய மக்கள் கட்சி தலைவர் ரவி என்பவர் […]

Continue reading …

“ஜெயிலர்” பட நடிகர் நீதிமன்றத்தில் ஆஜரா உத்தரவு

Comments Off on “ஜெயிலர்” பட நடிகர் நீதிமன்றத்தில் ஆஜரா உத்தரவு

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “ஜெயிலர்” திரைப்படத்தில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இவருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 2012ம் ஆண்டு வருமானதுறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், மோகன்லால் வீட்டிலிருந்து 2 யானை தந்தங்கள் பதுக்கி வைத்திருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர். அவை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விலங்குகள் பாதுகாப்பு சட்டத்திற்கு விரோதமான யானை தந்தங்களை வீட்டில் பதுக்கி வைத்ததற்காக நடிகர் மோகன்லால் மீது வழக்குப் பதிவு […]

Continue reading …