
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.அப்போது ஆறு மாத குழந்தையுடன் வந்த அரசு பேருந்து ஓட்டுனர் அமைச்சரின் காலில் விழுந்து தன்னை பணியிட மாற்றம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். மனைவி இறந்துவிட்ட நிலையில் இரண்டு குழந்தைகளை பார்த்துக்கொள்ள தன்னால் முடியவில்லை என்றும் அதனால் தனது சொந்த ஊரான தேனிக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர் அமைச்சர் சிவசங்கரின் காலில் விழுந்து கேட்டுக்கொண்டார். இதையடுத்து ஓட்டுனர் கண்ணன் […]
Continue reading …
நீதிமன்றத்தில் நடைபெறவிருக்கும் மதுரை அதிமுக மாநாட்டை தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சிவகங்கையை சேர்ந்த சேது முத்துராமலிங்கம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் மதுரை விமான நிலையத்தை சுற்றிய பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இப்பகுதியில் அதிமுக மாநாடுக்கு மதுரை விமான நிலைய அதிகாரியிடம் தடை இன்மை சான்றிதழ் பெறவில்லை. எனவே மாநாட்டிற்கு பெருமளவு தொண்டர்கள் வருவார்கள் என்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படும். எனவே இந்த […]
Continue reading …
ரஜினிகாந்த் இமயமலையிலிருந்து இன்று சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வரும் வழியில் அவர் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளன. சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் வெளியானது. படம் வெளியாவதற்கு முந்தைய நாள் அவர் இமயமலை சென்றார். தனது நண்பர்களுடன் அவர் இமயமலையில் இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வந்தன. இமயமலையிலிருந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்த் வழியில் ஜார்கண்ட் மாநில கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் […]
Continue reading …
விஜய் தேவரகொண்டா “லைகர்” திரைப்படத்துக்குப் பின் அடுத்த படமாக “குஷி” உருவாகி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தின் டிரெயிலர் சமீபத்தில் ரிலீசானது. இந்நிகழ்ச்சியின் போது பேசிய அவர் “குஷி” படமும் பேன் இந்தியா படம்தான் எனக் கூறியிருந்தார். சமீபத்தில் நடந்த “குஷி” படத்தின் மியூசிக்கல் கான்செர்ட் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா மற்றும் படத்தின் கதாநாயகி சமந்தா ஆகியோர் கலந்துகொண்டு பாடல்களுக்கு நடனமாடினர். அப்போது பேசிய விஜய் தேவரகொண்டா, “சமந்தா இன்னும் முழுமையாக மையோசிட்டிஸ் பிரச்சனையில் இருந்து குணமாகவில்லை. அவர் […]
Continue reading …
கடந்த 2018ம் ஆண்டு தமிழிசை சௌந்தரராஜன் தமிழக பாஜக தலைவராக இருந்த போது தூத்துக்குடிக்கு சென்றிருந்தார். அப்போது அதே விமானத்தில் வந்த சோபியா என்ற மாணவி பாஜகவுக்கு எதிராகவும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராகவும் கோஷமிட்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்தது. தற்போது இவ்வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி விமானநிலையத்தில் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிராக கோஷம் எழுப்பிய, […]
Continue reading …
இதுவரை விண்டோஸ் இயங்கு தளத்தில் இயங்கி வந்த மத்திய பாதுகாப்பு அமைத்துறை அமைச்சகம் தற்போது மாயா இயங்குதளத்துக்கு மாற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. சைபர் பாதுகாப்பு மற்றும் மால்வேர் சார்ந்த அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதை அடுத்து விண்டோஸ் இயங்கு தளத்துக்கு மாற்றாக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட மாயா இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு கணினிகளை பயன்படுத்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மாயா இயங்குதளத்தை பயன்படுத்த கடற்படை அனுமதி வழங்கி உள்ளதாகவும் ராணுவம் மற்றும் விமானப்படை இதன் […]
Continue reading …
திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை நீதிமன்றத்திற்கு சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை மாற்றக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சித்ராவின் தந்தை காமராஜ் தரப்பிலிருந்து இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மாற்றி விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும் என்றும் சித்ராவின் தந்தை இந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். விசாரணையை இழுத்து அடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே ஹேமந்த் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து வருவதாகவும் […]
Continue reading …
உயர் கல்வித்துறை தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலி இடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கடந்த சில மாதங்களாக விண்ணப்பம் பெறப்பட்டது. அதன் பின் கல்லூரி தொடங்கி தற்போது பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள காலி இடங்களை நிரப்ப வரும் 21ம் தேதி நேரடியாக மாணவர் சேர்க்கை நடைபெற இருப்பதாக தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் […]
Continue reading …
கடந்த 24 மணி நேரத்தில் இமாசல பிரதேசத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேகவெடிப்பு காரணமாக அங்கு கனமழை பெய்து வருகிறது. நிலச்சரிவில் சிக்கி பல உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியானது. அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இமாசல பிரேதேசம் சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரியில் பலியானவர்களில் 14 பேரில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், பலரது உடல்களை மீட்கும் பணி நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகிறது. தற்போது பத்ரிநாத், […]
Continue reading …
அமைச்சர் சாமிநாதன் “தமிழ்நாட்டில் தற்போதைக்கு செம்மொழி மாநாடு நடக்குவதற்கான திட்டம் ஏதும் இல்லை” என்று பேட்டியளித்துள்ளார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களிடம், “தமிழ்நாட்டில் தற்போதைக்கு செம்மொழி மாநாடு நடத்துவதற்கான திட்டம் ஏதுமில்லை, ஆனால் அதே நேரத்தில் பல்வேறு நாடுகளில் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஜகோபால தொண்டைமானுக்கு மணிமண்டபம் அமைப்பதற்காக ரூபாய் 3 கோடி 2 லட்சம் நிதி ஒதுக்கீடு […]
Continue reading …