
தேமுதிக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீதமுள்ள உணவை சாப்பிட்ட 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேமுதிக ஆர்ப்பாட்டம் சமீபத்தில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தக்காளி சாதம் வழங்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள உணவை அப்பகுதி மக்கள் சாப்பிட்டனர். இந்த உணவை முத்துகிருஷ்ணாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த தேமுதிக நிர்வாகி வழங்கியதாக தெரிகிறது. மீதமிருந்த தக்காளி சாதத்தை சாப்பிட்டவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் வந்தது. அதையடுத்து 25 பேர் […]
Continue reading …
“சந்திரமுகி 2” திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். “சந்திரமுகி” முதல் பாகத்திற்கு வித்யாசாகர் இசையமைத்தார். 2ம் பாகத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற மரகதமணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி.வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி இந்த படம் ரிலீசாகவுள்ளது. படத்தின் இசை வெளியீடு விரைவில் நடக்கும் என தெரிகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை சோனி […]
Continue reading …
“போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்வு சென்னை, கலைவாணர் அரங்கத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்றது. நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தினார். விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு – என்ற அக்கறை மிகுந்த நோக்கத்தோடு கடந்தாண்டு இத்திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. போதைப் பொருள்கள் புழக்கத்தை தடுக்க வேண்டும். போதைப்பொருள் விற்பனை மற்றும் […]
Continue reading …
அ.ம.அ.க தலைவர் ராஜேஸ்வரி பிரியா “கஞ்சா புழக்கத்தினை முழுமையாக ஒழிப்பதற்கான அதிகாரம் கையிலிருந்தும் அதனை செய்யாமல் பேசிப் பேசி மக்களை ஏமாற்ற வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்வில், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், போதைப் பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏற்றுக்கொண்டனர். இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: ‘போதைப் பொருட்கள் […]
Continue reading …
சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தி,மலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது
Continue reading …
இன்று ரஜினியின் நடிப்பில் “ஜெயிலர்” திரைப்படம் உலகம் முழுதும் ரிலீஸ் செய்யப்பட்டது. ரிலீசான முதல் நாளிலேயே ரூ.100 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ஜெயிலர்.” படம் இன்று உலகம் முழுதும் உள்ள திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. […]
Continue reading …
அலகாபாத் நீதிமன்றம் போக்சோ சட்டத்தை சில பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் என்றும் இதனால் அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கருத்து தெரிவித்துள்ளது. போக்சோ மற்றும் எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளில் பெண்கள் பொய் புகார்கள் பதிவு செய்கின்றனர் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 2011ம் ஆண்டில் பெண் ஒருவர் தொடர்ந்த பொய்யான பாலியல் வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. மாநில அரசிடமிருந்து நிவாரணம் பெறவும் அப்பாவியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவும் ஆயுதமாக […]
Continue reading …
புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் “எனக்கு மீனும் பிடிக்கும் மீம்ஸும் பிடிக்கும்” என பேட்டியளித்துள்ளார். தமிழிசை சௌந்தர்ராஜன் சமீபத்தில் மீன் உணவை சைவமாக்க வேண்டும் என்றும் அப்போதுதான் அதில் உள்ள சத்துக்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இது குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “மீன் சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு செல்லலாமா போன்ற கேள்விகளை எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் மீனில் உள்ள சத்துக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதை சைவ உணவிடம் சேர்க்க வேண்டும் என்று சொன்னேன். மேற்குவங்கத்தில் […]
Continue reading …
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திமுக ஆட்சி பொறுப்பேற்று 27 மாத காலம் ஆகியும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “ஏழை எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தொலைநோக்குப் பார்வையுடன் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்ட விலையில்லா மடிக்கணினி திட்டம், பழனிசாமி ஆட்சிக்காலத்தில் படிப்படியாக குறைக்கப்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தபிறகு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்ததும் லேப்டாப்-க்கு பதிலாக […]
Continue reading …
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ஜெயிலர்”. படம் உலகம் முழுதும் இன்று ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. பிரமாண்டமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, “மது […]
Continue reading …