Home » Entries posted by Shankar U (Page 222)
Entries posted by Shankar

நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டு!

Comments Off on நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டு!

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான தாமத்திற்கு காரணம் தமிழக அரசு தான் என்று தெரிவித்துள்ளார். இன்று மக்களவையில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான தாமதத்திற்கு தமிழக அரசுதான் காரணம். நிலம் கையகப்படுத்தும் பணிகள் மாநில அரசால் தாமதமாக மேற்கொள்ளப்பட்டதால் கட்டுமானம் தாமதம் ஆகியுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு கட்டிக் கொடுப்பதால் தமிழக அரசுக்கு நிதிச்சுமை இல்லை. தென்னிந்தியாவின் முன்னேற்றத்திற்கு பிரதமர் மோடி […]

Continue reading …

ரஜினிக்கு எதிராக கோஷம் எழுப்பிய விஜய் ரசிகர்!

Comments Off on ரஜினிக்கு எதிராக கோஷம் எழுப்பிய விஜய் ரசிகர்!
ரஜினிக்கு எதிராக கோஷம் எழுப்பிய விஜய் ரசிகர்!

“ஜெயிலர்” திரைப்படம் இன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சென்னையிலுள்ள வெற்றி தியேட்டரில் திரைப்படத்தைப் பார்க்க வந்த விஜய் ரசிகர் ரஜினிக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் ரஜினி ரசிகர்கள் அவரை தாக்கினர். சென்னையிலுள்ள வெற்றி தியேட்டரில் காலை 9 மணிக்கு “ஜெயிலர்” படத்தைப் பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் ரஜினி ரசிகர்கள் முதல்நாள் முதற்காட்சியை காண ஆர்வத்துடன் தியேட்டருக்குள் சென்றனர். இப்படத்தைப் பார்க்க இதே தியேட்டருக்கு விஜய் ரசிகர்களும் வந்துள்ளனர். இப்படத்தைப் பார்த்துக் […]

Continue reading …

தந்தையின் மனைவியாக நடித்த மகள்!

Comments Off on தந்தையின் மனைவியாக நடித்த மகள்!

ஓய்வூதியம் பெறுவதற்காக இறந்த தந்தையின் மனைவியாக 10 ஆண்டுகள் அவருடைய மகள் நடித்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வருவாய் துறை அலுவலகத்தில் பணியாற்றியவர் வஜாஹத் உல்லா கான். கடந்த ஜனவரி மாதம் காலமானார். அவருக்கு முன்பே அவருடைய மனைவி சபியா பேகம் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவருடைய மகள் பர்வேஸ் என்பவர் 10 ஆண்டுகளாக அவருடைய மனைவி என்று கூறி ஓய்வூதியம் பெற்று வந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்கள் கொடுத்து […]

Continue reading …

பெண் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி!

Comments Off on பெண் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி!

பெண் காவல் உதவி ஆய்வாளர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருகோகரணம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளராக சங்கீதா பணிபுரிந்து கொண்டிருந்தார். இவர் திடீரென அதிகளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காவல் உதவி ஆய்வாளர் சங்கீதாவின் தற்கொலைக்கு வழக்கறிஞர்கள் கொடுத்த மன அழுத்தமே காரணம் […]

Continue reading …

மல்லிகார்ஜூனே கார்கே ஆவேசம்!

Comments Off on மல்லிகார்ஜூனே கார்கே ஆவேசம்!

இன்று பாராளுமன்றத்தில் “மோடி என்ன பரமாத்மாவா அல்லது கடவுளா? வரட்டும் பார்க்கலாம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே ஆவேசமாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் மோடியின் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இவ்விவாதத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு இன்று பிரதமர் மோடி பதிலளித்தார். பிரதமர் மோடி இன்று நாடாளுமன்றத்திற்கு வந்து எதிர்க்கட்சியினர்களை கிழிக்க போகிறார் என பாஜக எம்பிகள் குரல் […]

Continue reading …

ஈபிஎஸ்-க்கு பாஜக எச்சரிக்கை!

Comments Off on ஈபிஎஸ்-க்கு பாஜக எச்சரிக்கை!

மதுரை பாஜகவினர் “மலையோடு மோதி மண்ணாகிவிட வேண்டாம்” என எடப்பாடி பழனிச்சாமிக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பாஜக பிரமுகர்கள் மற்றும் அதிமுக பிரமுகர்கள் கடந்த சில நாட்களாகவே கடும் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கி பேட்டியளித்துக்கொண்டு அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்று செல்லூர் ராஜூ கூறியதற்கு அண்ணாமலை “அரசியல் விஞ்ஞானிகள் எல்லாம் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்திருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் […]

Continue reading …

சென்னையில் சிறுமியை முட்டிய பசுமாடு!

Comments Off on சென்னையில் சிறுமியை முட்டிய பசுமாடு!

பள்ளி சிறுமியை சென்னையில் பசுமாடு முட்டி தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக வீடுகளில் ஆடு, மாடு, பூனைகள் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகிறது. ஆனால், இவற்றை பொது இடங்களில் விடுவதால் ஒரு சில நேரங்களில் மக்கள், வாகன ஓட்டிகள், குழந்தைகள் முதற்கொண்டு பலரும் பாதிக்கப்படுகிறார்கள். சென்னை அரும்பாக்கம் சி.எம்.டி.ஏ. பகுதியில் சாலையில் கட்டுப்பாடின்றி திரிந்த பசுமாடு, அவ்வழியே சென்ற பள்ளி சிறுமியை முட்டித் தூக்கி வீசியது. அந்த பசு மாட்டிடம் இருந்து சிறுமியை மீட்கப் பலரும் […]

Continue reading …

“ஜெயிலர்” படம் பற்றி ரம்யா கிருஷ்ணன்!

Comments Off on “ஜெயிலர்” படம் பற்றி ரம்யா கிருஷ்ணன்!

இன்று உலகம் முழுதும் உள்ள திரையரங்குகளில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் “ஜெயிலர்.” ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இன்று வெளியான இப்படம், ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. “ஜெயிலர்” படம் காலை 9 மணிக்குத்தான் முதல் ஷோ ஆரம்பமானது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் என்ன ரெஸ்பான்ஸ் உள்ளது? படம் எப்படி உள்ளது? […]

Continue reading …

ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் விஜய் படம்!

Comments Off on ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் விஜய் படம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் “லியோ” திரைப்படம் இவ்வாண்டில் அதிகமாக எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. “லியோ” திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. இப்படம் அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுதும் ரிலீசாகவுள்ளது. படத்தில் விஜய்யுடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்போது திடீரென “லியோ” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக […]

Continue reading …

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து!

Comments Off on நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து!

உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர் பொன்முடி மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் மிக மோசமான விசாரணை செய்யப்பட்டுள்ளது என கருத்து தெரிவித்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுவித்து வேலூர் மாவட்டம் முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் இவ்வழக்கை தானாகவே முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஏன் எடுத்துள்ளேன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். இவ்வழக்கில் மிக மோசமான முறையில் […]

Continue reading …