
அமைச்சர் முத்துசாமி மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கும் மதுபான விலை ஏற்றத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனலுக்கு அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பேட்டியளித்தபோது மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக மதுபானம் விலை உள்பட அனைத்து விலைகளும் உயர்த்தப்பட உள்ளது. இந்த பக்கம் கொடுப்பது போல் கொடுத்து இன்னொரு பக்கம் மக்களிடமிருந்து அரசு பணத்தை வாங்கிக் கொள்கிறது என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார். மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கும் மதுபானங்கள் விலையேற்றத்திற்கும் எவ்விதமான […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 2வது சுரங்கப் பணிகளுக்கான வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் சுரங்க விரிவாகப் பணிகளில் என்எல்சி நிறுவனம் ஈடுபட்டு வருவதை வன்மையாக கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நெய்வேலியில், தமிழக அரசு, ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அத்துமீறி, பயிரிடப்பட்டுள்ள நிலங்களை பாழ்படுத்தி வருவதாக, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழக அரசின் இந்தப் போக்கு, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது குறித்து, நெய்வேலி என்எல்சி நிறுவனத் தலைவர் பிரசன்னகுமாரிடம் தொலைபேசி […]
Continue reading …
அமமுக பொதுச்செயலாளர் தினகரன் பேராபத்து விளைவிக்கும் சுரங்கத்துக்கான விரிவாக்கப் பணிகளை உடனே கைவிட வேண்டும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், “விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை என்எல்சி நிறுவனம் மேற்கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக வேளாண் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடலூர் அருகே வளையமாதேவி கிராமத்தில், நடவு செய்யப்பட்ட வயலில், பயிர்களை அழித்து பொக்லைன் […]
Continue reading …
“கேப்டன் மில்லர்’’ ஜூலை 28ம் தேதி திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. “ராக்கி” மற்றும் “சாணி காகிதம்” ஆகிய திரைப்படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அடுத்து இயக்கி வரும் படம் “கேப்டன் மில்லர்.” இப்படத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். தென்காசி அருகே நடந்த ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. சமீபத்தில் இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீசானது. வரும் ஜூலை 28ம் தேதி தனுஷ் […]
Continue reading …
இன்று சென்னை ஐகோர்ட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுப்பது எப்போது? என்பது குறித்த விசாரணை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது விசாரணை நடைபெறவுள்ளது. இன்றைய விசாரணையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு நடத்தவுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை எந்த தேதியில் இருந்து அமலாக்கத்துறை காவலில் எடுக்கலாம் என இரு நீதிபதிகள் அமர்வு முடிவு செய்யும் என […]
Continue reading …
பெங்களூருவில் உள்ள அலுவலகத்தை கடும் நிதி நெருக்கடி காரணமாக பைஜூஸ் நிறுவனம் காலி செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு நிறுவனத்தின் உலகளாவிய மறுசீரமைப்பின் ஒரு பகுதி என்றும், சில அலுவலகங்களை மூடுவது தவிர்க்க முடியாதது என்றும் தெரிவித்துள்ளது. பைஜூஸ் நிறுவனத்தின் பெங்களூரு அலுவலகத்தில் சுமார் 1,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. பெங்களூரு மட்டுமின்றி பைஜூஸ் நிறுவனம் அதன் உலகளாவிய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக வேறு சில அலுவலகங்களையும் மூட உள்ளது. இந்த முடிவுகள் […]
Continue reading …
இலங்கை கடற்படையினர் வங்க கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் பின்னர் விடுதலை செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. நேற்று ராமேஸ்வரம் மண்டபம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது […]
Continue reading …
சலூன் கடைகளில் மாணவர்களுக்கு சுதீப் பாணியில் சிகை அலங்காரம் செய்ய வேண்டாம் எனகர்நாடக மாநிலம் சென்னப்பா சித்தராமப்பா நாவிக் பள்ளி ஆசிரியர்கள் என்று வலியுறுத்தியுள்ளனர். கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சுதீப். இவர் பின்னணி பாடகர், எழுத்தாளர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளார் எனப் பன்முக கலைஞராக இருக்கிறார். இவர், தாயவ்வ, கிச்சா, தம், நந்தி, சந்து, விஜய்யுடன் இணைந்து “புலி,” “நான் ஈ” உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சுதீப் “ஹெப்பிலி” படத்தில் நடித்து வருகிறார். […]
Continue reading …
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாதவ் சின்னப்பா என்பவர் கூகுள் நிறுவனத்தில் 13 ஆண்டுகள் வேலை செய்தார். ஆனால் அவரை திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அவர் சமூக வலைதள பக்கத்தில் 2010ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் தனது பணி தொடங்கியதாகவும் 13 ஆண்டுகள் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்தது எண்ணி தான் பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார். கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் வரை தனது பணிகள் மன நிறைவை தந்தது என்று அவர் தெரிவித்துள்ளார். […]
Continue reading …
ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கிய சீனாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் 44வது மாடியில் பார்க்கிங் செய்துள்ளார். சீனா நாட்டில் உள்ள புஜியான் மாகாணத்தில் ஜியாமென் நகரைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் பெந்தவுஸின் 44 வது மாடியில் வசிக்கிறார். சமீபத்தில் இவர் ரூ.3.2 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் காரின் கோஸ்ட் சீரிஸை வாங்கியுள்ளார். இதனை பார்கிங்க் செய்ய இவர் திட்டமிட்ட செயல்தான் இக்காரை விடவும் இவரை பிரபலமாக்கியுள்ளது. இக்காரை தன் வீட்டின பால்கனியில் நிறுத்துவதற்காக, அங்குள்ள […]
Continue reading …