Home » Entries posted by Shankar U (Page 35)
Entries posted by Shankar

நடிகர் சூர்யா கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுகவுக்கு கண்டனம்!

Comments Off on நடிகர் சூர்யா கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுகவுக்கு கண்டனம்!

நடிகர் சூர்யா கள்ளக்குறிச்சி விஷசாராயத்திற்கு பலியானவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்ததோடு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில்கூட நடக்காத துயரம். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள் எனும் தகவல் அச்சமூட்டுகிறது. அடுத்தடுத்து நிகழும் மரணங்களும், பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலும் மனதை நடுங்கச் செய்கிறது. கள்ளச் சாராயத்திற்கு அன்பிற்குரியவர்களைப் பலிகொடுத்துவிட்டு அழுது துடிப்பவர்களுக்கு எத்தகைய வார்த்தைகளில் ஆறுதல் சொல்லிவிடமுடியும்? […]

Continue reading …

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் நிறுத்திவைப்பு!

Comments Off on அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் நிறுத்திவைப்பு!

டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்தி வைத்து டில்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தேர்தலின் போது பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இடைக்கால ஜாமினை நீட்டிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால், மீண்டும் அவர் சிறைக்கு சென்றார். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் […]

Continue reading …

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; வேட்புமனு தாக்கல் நிறைவு?

Comments Off on விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; வேட்புமனு தாக்கல் நிறைவு?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஜூன் 14ம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். எனவே இந்த தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியின் திமுக எம்எல்ஏ புகழேந்தி திடீரென காலமானதால், அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஜூலை 10ம் தேதி […]

Continue reading …

கிரிக்கெட் வீரர் கர்நாடகாவில் குளிர்பான நிறுவனத்தில் முதலீடு!

Comments Off on கிரிக்கெட் வீரர் கர்நாடகாவில் குளிர்பான நிறுவனத்தில் முதலீடு!

கர்நாடக மாநிலத்தில் 1,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இலங்கை அணியின் முன்னாள் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் குளிர்பான நிறுவனத்தை தொடங்கவுள்ளார். குளிர்பானம், திண்பண்ட தயாரிப்பு நிறுவனத்தை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான‌ முத்தையா முரளிதரன் அங்கு நடத்தி வருகிறார். தனது குளிர்பான நிறுவனத்தை இந்தியாவிலும் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளார். இதற்காக‌ கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீலுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முத்தையா முரளிதரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கர்நாடக அரசு போதிய […]

Continue reading …

காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஷசாராய பலி குறித்து கருத்து!

Comments Off on காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஷசாராய பலி குறித்து கருத்து!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது கூட கள்ளச்சாராய மரணம் குறித்த சம்பவம் நடந்தது என சட்டப்பேரவையில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், “கள்ளச்சாராய விவகாரத்தில் யாரும் தப்பிக்க முடியாதபடி வலுவான சட்டம் உருவாக்க வேண்டும், கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும். மக்களுக்கு எதிராக ஆட்சி நடத்தியவர்கள் இப்போது மக்களுக்காக பேசுகிறார்கள், அடுத்த தேர்தலில் அவர்களுக்கு மக்கள் பதில் சொல்வார்கள் இது போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் […]

Continue reading …

போதை மிட்டாய்கள் விற்க நகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

Comments Off on போதை மிட்டாய்கள் விற்க நகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

நகராட்சி சுகாதார அலுவலர் என். வெங்கடாசலம் சுகாதார மேற்பார்வையாளர்கள் அருள்முருகன் கலைசிவன் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் கொண்ட குழுவினர் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின் படி திருச்செங்கோடு நகராட்சியில் மேல்நிலைப் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலைப் பொருட்கள் மற்றும் போதை தரும் மிட்டாய்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று கள ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் சந்தேகத்திற்குரிய காலாவதியான மிட்டாய் மற்றும் உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நகரில் உள்ள நான்கு […]

Continue reading …

விஷயசாராயம் உயிரிழப்பு குறித்து விளக்கமளித்த அமைச்சர்!

Comments Off on விஷயசாராயம் உயிரிழப்பு குறித்து விளக்கமளித்த அமைச்சர்!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த சம்பவத்தில் பலர் உயிரிழந்தற்கான காரணம் குறித்து விளக்கமளித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய சம்பவத்தில் பலர் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் அருந்திய 168 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 பெண்கள் உட்பட 48 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று புதுச்சேரி சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பின் பேசிய அவர், விஷ சாராயம் அருந்தியவர்கள் மருத்துவமனை […]

Continue reading …

கள்ளக்குறிச்சி மரணங்கள் குறித்து ஜிவி பிரகாஷ்!

Comments Off on கள்ளக்குறிச்சி மரணங்கள் குறித்து ஜிவி பிரகாஷ்!

தமிழகத்தை கள்ளக்குறிச்சி விஷசாராய மரணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் இச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆளும் கட்சிக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. திரையுலகை பொருத்தவரை விஜய், சரத்குமார், பா.ரஞ்சித், தங்கர் பச்சான், விஷால், கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் தங்கள் சமூக வலைதளங்களில் கண்டனமும் இனிமேல் இது மாதிரி நடக்காத வண்ணம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பதிவு செய்து வருகின்றனர். அவ்வகையில் நடிகர் […]

Continue reading …

கள்ளக்குறிச்சி விஷசாராயம் குறித்து தங்கர்பச்சான் கேள்வி?

Comments Off on கள்ளக்குறிச்சி விஷசாராயம் குறித்து தங்கர்பச்சான் கேள்வி?

தற்போது கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து நடிகர், இயக்குனர் தங்கர்பச்சான், “மாடுகளின் உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மனித உயிர்களுக்கு இங்கே இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர், “கருணையிலா ஆட்சிக்கடிது ஒழிக! வள்ளலார் இராமலிங்க அடிகளார் மாடுகளின் உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மனித உயிர்களுக்கு இங்கே இல்லை. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் இன்று கள்ளச்சாராயத்தால் பறிபோன நாற்பது உயிர்களைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் […]

Continue reading …

கள்ளக்குறிச்சி விஷசாராயம் விவகாரம் பலி எண்ணிக்கை உயர்வு!

Comments Off on கள்ளக்குறிச்சி விஷசாராயம் விவகாரம் பலி எண்ணிக்கை உயர்வு!

தற்போது கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 23 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேரும் உயிரிழப்பு என்றும், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 9 பேர் என இதுவரையில் மொத்தம் 39 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குறித்த தகவல் வெளியான போது 5 பேர்கள் மட்டுமே உயிர் இழந்ததாக கூறப்பட்டது. அதன் பிறகு இன்று […]

Continue reading …